Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார வாரியம் திடுதிப்புன்னு போட்ட உத்தரவு.. இனிமேல் இப்படித்தான்.. நோட் பண்ணுங்க மக்களே.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

மாஞ்சா நூல் பட்டம் விடக்கூடாது என்று 2015-லேயே தடைச்சட்டம் சென்னையில் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் மாஞ்சா நூல் பட்டம் விற்பவர்கள், வாங்குபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்தனர்.

Tamil Nadu Electricity Board Major announcement and Should not fly kites near power lines

அதற்கேற்றவாறு, மாஞ்சாநூல் பட்டமும் ஓரளவு கட்டுப்பட்டுதான் காணப்பட்டது. ஆனால், 3 வருடங்களுக்கு பிறகு திடீரென திரும்பவும் முளைத்துவிட்டது, சென்னைவாசிகளை அதிர்ச்சி நிறைந்த கவலையில் ஆழ்த்தியது. பைக்கில் தகப்பனுடன் சென்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையின் கழுத்தில், எங்கிருந்தோ பறந்துவந்த மாஞ்சா நூல் மாட்டிக்கொண்டுவிட்டது.. இதில், கழுத்து அறுபட்டு அந்த குழந்தை இறந்தே போனான்.

மாஞ்சாநூல்: இப்படி, சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் உயிரிழப்புகள் அதிகரித்தன.. பலர் காயமடைந்தனர்... இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல், பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்துவைக்க தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது... இதற்கு பிறகே, மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுவது கணிசமாக குறைந்தது...

சமீபத்தில், ஒரு சிலர் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் ரகசியமாக விற்பனை செய்து வருவதாக சென்னை போலீசுக்கு தகவல் கிடைக்கவும், அதுகுறித்தும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது.. இப்படி பல்வேறு நடவடிக்கைகளை அரசு தரப்பில் எடுத்துவரும்நிலையில், தற்போது மின்வாரியம் சார்பிலும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
மின்வாரியம்: அதாவது, அனல் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம், மின் கோபுர வழித்தடம் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்கிறது... எனவே, சென்னையில் முக்கிய இடங்களை தவிர்த்து, மற்ற பகுதிகளில் மின் கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாக, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.. ஆனால் சிலர், மின் கம்பிகளுக்கு பக்கத்திலேயே காற்றாடி விடுவதால் மாஞ்சா நூல் கம்பியில் சிக்கி கொள்கிறது.

Tamil Nadu Electricity Board Major announcement and Should not fly kites near power lines

இதனால், காற்றாடியை எடுக்க முயலும்போது, மின் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகிறது... மேலும், மின் கம்பத்தில் உள்ள சாதனங்களில் காற்றாடி, நூல் சிக்கி கொள்வதால் பழுதாகி, மின் தடையும் ஏற்படுகிறது.

அபாயம்: எனவேதான், "மின் கம்பிகள், கம்பங்கள் அல்லது மின் கோபுர கம்பிகள் அருகே காற்றாடி பறக்க பறக்க விடாதீர்கள்.. மழை காலங்களில் மின் கம்பிகளுக்கு அருகில் காற்றாடி பறக்க விடுவதை தவிர்க்கவும்.. இது நீர் கடத்து திறனை அதிகரிக்கலாம்... இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது" என்று மின்வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+