தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவ்வளவு சம்பளமா? அகவிலைப்படி 4% உயர்வு.. வெளியாகும் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. நாளை ஜூலை மாதம் துவங்க உள்ள நிலையில், மிகுந்த ஆர்வத்துடன், தமிழக அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வை எதிர்நோக்கி உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்...
ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது. எனவேதான், தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அறிவிப்பு வந்தது: இது தொடர்பாக தமிழக அரசும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.. இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கூடுதல் உயர்வு: மேலும், இப்போதைய அறிவிப்பின்படி 4% அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரக்கூடும்.. அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக அரசு ஊழியர்களுக்கு மறுபடியும் அகவிலைப்படி உயரும் என்ற தகவல் வட்டமடித்தது.
அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4% அகவிலைப்படியானது, 2023 ஏப்ரல் 1ம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. ஜனவரி மாதம் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை, காலதாமதமாக, அதாவது மே மாதம் உயர்த்தி அறிவித்திருந்தது.. இதனால் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி எப்போது கிடைக்கும்? என்ற கேள்வியும் அன்றே எழுந்தது..
எகிறும் எதிர்பார்ப்பு: இன்றுடன் ஜுன் மாதம் முடிவடையும் நிலையில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி ரூ.10,710 ஆக உயரும் என தெரிகிறது.. அந்தவகையில், அரசு ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள்: அதுபோலவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications