அரசு விரைவு பேருந்து.. தஞ்சாவூர், சேலம், மதுரைக்கு மகிழ்ச்சி.. இனிமேல் இந்த 22 இடங்களிலும் அதிரடிதான்
சென்னை: அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளிலும் இந்த அதிரடியை செயல்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது.

மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.
பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
பணிமனைகள்: எனினும், அரசு போக்குவரத்து கழகத்துக்கான வருவாய் அதிகரிப்பு அவசியமானதாக உள்ளது.. அதற்காக, டிக்கெட் விலையை ஏற்றி மக்களின் தலையில் பாரத்தை சுமத்தவும் அரசு விரும்பவில்லை.
அதனால்தான், மாற்று வழியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளில் பார்சல் புக்கிங் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது... அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் கொண்டு செல்லும் திட்டமானது, கடந்த வருடமே துவக்கப்பட்டதுதான்.
ஆனால், 1000-க்கும் மேற்பட்ட அரசு விரைவு பஸ்களில், இந்த திட்டத்தின் மூலம் பொருட்களை அனுப்ப முக்கிய பேருந்து நிலையங்களில் மட்டுமே புக்கிங் ஆபிஸ் வசதி உள்ளதே தவிர, பிற இடங்களில் திறக்கப்படவில்லை. எனவே, இந்த திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் போக்குவரத்து பணிமனைகளிலும் பார்சல் புக்கிங் அலுவலகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜரூர் பணிகள்: அந்தவகையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளில் பார்சல் புக்கிங் செய்யும் அலுவலகங்களை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பணிமனைகளில், இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications