Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு விரைவு பேருந்து.. தஞ்சாவூர், சேலம், மதுரைக்கு மகிழ்ச்சி.. இனிமேல் இந்த 22 இடங்களிலும் அதிரடிதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளிலும் இந்த அதிரடியை செயல்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது.

Tamil nadu Government Express Buses and 22 parcel booking office open in SETC work shops soon

மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.

பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

பணிமனைகள்: எனினும், அரசு போக்குவரத்து கழகத்துக்கான வருவாய் அதிகரிப்பு அவசியமானதாக உள்ளது.. அதற்காக, டிக்கெட் விலையை ஏற்றி மக்களின் தலையில் பாரத்தை சுமத்தவும் அரசு விரும்பவில்லை.

அதனால்தான், மாற்று வழியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளில் பார்சல் புக்கிங் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது... அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் கொண்டு செல்லும் திட்டமானது, கடந்த வருடமே துவக்கப்பட்டதுதான்.

ஆனால், 1000-க்கும் மேற்பட்ட அரசு விரைவு பஸ்களில், இந்த திட்டத்தின் மூலம் பொருட்களை அனுப்ப முக்கிய பேருந்து நிலையங்களில் மட்டுமே புக்கிங் ஆபிஸ் வசதி உள்ளதே தவிர, பிற இடங்களில் திறக்கப்படவில்லை. எனவே, இந்த திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் போக்குவரத்து பணிமனைகளிலும் பார்சல் புக்கிங் அலுவலகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜரூர் பணிகள்: அந்தவகையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளில் பார்சல் புக்கிங் செய்யும் அலுவலகங்களை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பணிமனைகளில், இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+