தூய்மைக் காவலர்களின் மதிப்பூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்வு - தமிழக அரசு அரசாணை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில், தூய்மைக் காவலர்கள் இல்லம்தோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து வருகின்றனர்.

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிககை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-இல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
முன்னதாக, ஊராட்சிகளில் பணிபுரியும் பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கான தொகுப்பூதியம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications