"நேரம்" பார்த்து டெல்லி கிளம்பிய ஆளுநர் ரவி.. பொன்முடிக்கு மீண்டும் வந்த சோதனை.. திமுக எதிர்பார்க்கல
சென்னை: தமிழக ஆளுநர் ரவி இன்று டெல்லி கிளம்பி சென்றார்.. வழக்கமான அலுவல் பணி காரணமாக தலைநகர் புறப்பட்டு சென்றுள்ளார் ஆளுநர் ரவி.
திமுகவின் மூத்த தலைவர் பொன்முடி வழக்கில் ஹைகோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.. அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 வருட சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, அமைச்சர் பதவி + எம்எல்ஏ பதவியை உடனடியாக பொன்முடி இழந்தார்.. அத்துடன், பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்றத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தண்டனை: இதனிடையே, ஹைகோர்ட் தீர்ப்பினை எதிர்த்து பொன்முடி, மற்றும் அவரது மனைவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை ஹைகோர்ட் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது... அத்துடன், விசாலாட்சிக்கு ஜாமீனையும் வழங்கி உத்தரவிட்டது.
இதனால், மறுபடியும் எம்எல்ஏ பதவியை பெற்றுள்ளார் பொன்முடி... மறுபடியும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்கிறார்.. மறுபடியும் அவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார். இன்றைக்குள் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து சுப்ரீம் கோர்ட்டின் நகலையும் தன்னுடைய கடிதத்துடன் இணைத்து பரிந்துரை செய்திருந்தார் ஸ்டாலின்.
பரிந்துரை: எனவே, பொன்முடிக்கு ராஜ்பவனில் இன்று பதவிப்பிரமாணத்தை ஆளுநர் நடத்தி வைப்பார் என்றும், பதவி பிரமாணத்திற்கு இன்றைய தினம் ஆளுநர் நேரம் ஒதுக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம், பதவியேற்புக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை ஜரூர் வேகத்தில் இறங்கி செய்ய துவங்கிவிட்டதாகவும் செய்திகள் கசிந்தன.
ஆனால் திடுதிப்பென்று ஆளுநர் ரவி இன்று டெல்லி கிளம்ப உள்ளதாக நேற்றிரவே செய்திகள் கசிந்தன.. வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடியே, இன்று ஆளுநர் டெல்லி கிளம்புவதாக கூறப்பட்டது.
டெல்லி கிளம்பினார்: அதன்படியே, இன்று காலை 6.30 மணியளவில் ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை மறுதினம் அதாவது 16ம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். எனவே, இன்றைய தினம் பொன்முடி அமைச்சராக மறுபடியும் பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது... ஒருவேளை நாளை மறுநாள் ஆளுநர் சென்னை திரும்பிய பிறகே பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்றே தெரிகிறது. பொன்முடி பதவி பிரமாண விவகாரம் தொடர்பாக, மூத்த வக்கீல்களிடம் ஆலோசனை நடத்த அவர் சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பரபரப்பு: ஏற்கனவே திமுக அரசு + ஆளுநர் ரவி தரப்பில் அதிருப்திகளும், மோதல் போக்குகளும் நிலவிவரும் நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் நேரத்தில், ஆளுநர் டெல்லிக்கு பறந்திருப்பது மிகப்பெரிய பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
பொன்முடி: ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டதன்படிதான் ஆளுநர் டெல்லி செல்கிறார் என்கிறார்கள். இதற்கும் பொன்முடியின் பதவியேற்பிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று சொல்லப்பட்டாலும், சுப்ரீம் கோர்ட் பொன்முடி விவகாரத்தில் கூறியவைகள் குறித்து ஆலோசனை பெறவே ஆளுநர் டெல்லி செல்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பொன்முடி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தவும் ஆளுநர் முடிவு செய்திருக்கிறாராம். முக்கியமாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணியிடம் சில சட்ட ஆலோசனைகளை கேட்கதான் டெல்லி செல்கிறார் என்கிறார்கள்.
தீவிர ஆலோசனை: அடுத்த 2 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழலில், அதன் பிறகு பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கலாமா? கூடாதா? என்பது பற்றி சட்ட நிபுணர்களிடம் விளக்கம் பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications