தமிழகத்தில் ஒரே நாளில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்! வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பல மருத்துவக் கல்லூரிகளில் டீன்கள் பதவி காலியாக இருப்பதாகவும் இதை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கல்வியாளர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு இப்போது அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் அதிகபட்ச அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

இது தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களால் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க முடியும்.
கல்லூரி டீன்கள்: இருப்பினும், கடந்த சில காலமாகவே இதில் 14 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் இல்லாமல் இருந்தன. சென்னை, செங்கல்பட்டு, மதுரை எனப் பல மருத்துவக் கல்லூரிகள் டீன்கள் இல்லாமலேயே செயல்பட்டு வந்தன. இதைக் கல்வியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டி விரைந்து டீன்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாகச் சமீபத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்ட போதும் மிக விரைவில் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தார். இதற்கிடையே இப்போது 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அறிவிப்பு: அதன்படி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி முதல்வராக லியோ டேவிட், செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி முதல்வராக சிவசங்கர், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ்குமார், திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவி, குமரி மருத்துவக்கல்லூரி முதல்வராக ராம லட்சுமி, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பவானி, ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி முதல்வராக அமுதா ராணி, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங், சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிரப் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா நியமனம் செய்யப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications