சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் பார்க்க போறீங்களா? எப்படி செல்வது? பார்க்கிங் எங்கே? முழு விவரம்!
சென்னை: சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. பார்முலா 4 கார் பந்தயம் குறித்த அட்டவணை மற்றும் பார்க்கிங் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்துகிறது. வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் சென்னையில் நடக்கிறது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.

சென்னை கார் ரேஸ்: 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இந்த கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த சர்க்யூட், தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.
கார் ரேஸ் போட்டிகளைக் காணச் செல்வோர் மெட்ரோ ரயில் மூலமாகச் செல்லலாம். மவுண்ட் ரோடு, அண்ணா சதுக்கம், பிராட்வே செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம். மேலும், சொந்த வாகனங்களில் செல்பவர்கள் பார்க்கிங் செய்வதற்கான இடங்களும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஃபார்முலா 4 ரேஸ் அட்டவணை: ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகளின் கால அட்டவணை, கிராண்ட்ஸ்டாண்ட் இருக்கை விவரங்கள், தீவுத்திடலில் உள்ள பார்வையாளர் மாடங்களின் விவரங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். அதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. மாலை 5.30 மணியளவில் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்.. பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.. உதயநிதி கொடுத்த சர்ப்ரைஸ்!
பார்க்கிங் ஸ்லாட்: கிராண்ட் ஸ்டாண்ட் 1, அண்ணா சாலை முத்துசாமி பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்வோர் தங்கள் வாகனங்களை எம்.எம்.சி கிரிக்கெட் மைதானத்தில் நிறுத்திச் செல்லவேண்டும். சுவாமி சிவானந்தா சாலையில், கிராண்ட் ஸ்டாண்ட் 2, கிராண்ட் ஸ்டாண்ட் 3, கிராண்ட் ஸ்டாண்ட் 4, கிராண்ட் ஸ்டாண்ட் 5 ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அங்கு செல்வோர் தங்கள் வாகனங்களை கலைவாணர் அரங்கத்தில் நிறுத்திச் செல்லவேண்டும்.
கோல்டு, பியர்ல் கிராண்ட் ஸ்டாண்ட் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது. HMR, ஸ்பான்ஸர்கள் ஓய்வறை, பிரீமியம் ஓய்வறை ஆகியவையும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்பவர்கள் சென்னை பல்கலைக்கழகம், கடற்கரையில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications