இப்படியும் ஒரு திட்டமா..அதிர வைத்த ஸ்டாலின்.. 10,12 பெயிலான மாணவர்களே! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளை அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வழிகாட்ட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும். அவர்கள் எப்படிப்பட்ட உயர்கல்விக்கு விரும்புகிறார்களோ அதற்கு வழிகாட்ட வேண்டும் என்று விரும்புகிறது.

ஏழை மாணவர்கள் பலர் எந்த நிலையிலும் கல்வியை கைவிடக்கூடாது என்று வலியுறுத்தி உள்ள தமிழக அரசு, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாமல், துணை தேர்வுக்கு விண்ணபிக்கி விரும்பாமல் உள்ளவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி உள்ளது. அவர்களை அனைவரும் தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளை அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வழிகாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர், மாணவர்களின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதன்படியே மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான திட்டமிடல் கூட்டமானது இணைய வழியில் 13.07.2023 அன்று நடைபெற்றது.
இதன் படியே, "12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்காத 39,000 மாணவர்களின் தகவல்களை EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தல் வேண்டும். அத்தகவல்கள் ஏற்கனவே பள்ளித் தலைமையாசிரியர் எமிஸ் லாகின் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் எமிஸ் லாகின் -ல் வழங்கப்பட்டுள்ளதுஒவ்வொரு மாணவரிடமும் தொழிற்கல்வி சார்ந்து என்ன படிக்க விரும்புகின்றார்கள் என்று கேட்டறிந்து அரசின் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வழிகாட்ட வேண்டும்.
மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இணையவழி விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தேதிக்குள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் தலைமையாசிரியர்களின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்,
சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் விவரங்கள் மற்றும் தொழிற்கல்வி பயில விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விவரங்களைப் பள்ளி வாரியாகத் தொகுத்து சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலுக்குப் பின், விண்ணப்பித்துள்ள சம்மந்தப்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதிசெய்து அதன் விவரங்களைத் தொகுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலோடு மாநில அலுவலகத்திற்கு அனுப்ப சார்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவறுத்தப்படுகிறார்கள். அத்தகவல்களை தலைமை ஆசிரியர்களால் எமிஸ் லாகின் -ல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

அவ்வாறு விருப்பம் தெரிவித்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் உரிய விண்ணப்பங்களை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் பெற்று ஒருங்கிணைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களின் ஒத்துழைப்போடு சார்ந்த மாவட்டத்தின் அருகாமை ஐடிஐ கல்லூரி முதல்வர்களிடம் நேரில் சென்று ஒப்படைத்து மாணவர்களின் சேர்க்கையினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.
விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் தலைமையாசிரியர்களின் வாயிலாக பதிவு செய்தல் வேண்டும். ஏதேனும் மாணவரோ, பெற்றோரோ அருகாமை ஐடிஐ கல்லூரி குறித்து நேரில் கண்டறிய விரும்பினால் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று " பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications