கலக்கப் போகுது கன்னியாகுமரி.. நெல்லை மக்களுக்கு தொல்லை இல்லை! புத்தாண்டு அதுவுமா வந்த ஹேப்பி நியூஸ்!
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட்ட பிறகு, ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 பேருக்கும் அதிகபட்சம் 1,000 பேருக்கும் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென் மாவட்ட இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகலாம் என்று நம்பப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு முழுவதும் முன்னணியில் உள்ள நகரங்களில் சென்னை முக்கிய பங்கு வகிக்கிறது. பெங்களூருக்குப் பிறகு பெரிய ஐடி மையமாக சென்னை விளங்குகிறது. ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில், இது போன்ற ஐடி நிறுவனங்களில்லை.

இதனால், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்கள் ஐடி வேலை செய்ய வேண்டுமெனில், அவசியம் சென்னை அல்லது கோவை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த பிரச்சனையை மாற்றுவதற்காகவே அரசு மாநிலம் முழுவதும் டைடல் பார்க், மினி டைடல் பார்க், டைடல் நியோ பார்க் போன்றவற்றை அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் இப்போது புதிய மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொரு பூங்காவும், தரைத்தளம் உட்பட மொத்தம் நான்கு தளங்களாக கட்டப்படும். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த மூன்று மினி டைடல் பூங்காக்களும் 18 மாதங்களில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அரசு திட்டமிட்டுள்ளது. கட்டிடத்திலிருந்து அலுவலக வசதிகள் வரை அனைத்தும் நவீன முறையில் அமைக்கப்பட்டு, ஐடி நிறுவனங்கள் எளிதாக செயல்படும்படி சூழல் உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தென் மாவட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே நல்ல சம்பளத்துடன் ஐடி வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
குடும்பத்துடன் வாழும் வசதியும் கிடைக்கும். அதேசமயம், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், தென் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பெரிய முயற்சியாக இந்த மினி டைடல் பூங்கா திட்டம் கருதப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இங்கு பல ஐடி நிறுவனங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications