சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. இரவோடு இரவாக தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சத்யபிரத சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் முருகானந்தம் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நாளை மறுநாள் புத்தாண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் சிலர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் முருகானந்தம் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அரசு முதன்மைச் செயலாளராக இருக்கும் அதுல்ய மிஸ்ரா டிசம்பர் 31ம் தேதி உடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்யபிரத சாகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளராக இருந்த நிலையில், அந்தப் பதவிக்கு டாக்டர் கே.சு. பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நில நிருவாகம் ஆணையராக பழனிசாமி இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு இரா.கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக கஜலட்சுமி இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தேவ் ராஜ் தேவ் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் முதன்மைச் செயலாளர் /மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவ் ராஜ் தேவ் வகித்து வந்த அறிவியல் நகர முதன்மைச் செயலாளர் பதவி ஹர் சஹாய் மீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹர் சஹாய் மீனா வகித்து வந்த ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் பதவிக்கு மலர்விழி நியமிக்கப்பட்டுள்ளார். விக்ரம் கபூர் டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், அவர் வகித்து வந்த அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி தலைவர் பதவி கோபால சுந்தர ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.. கோபால சுந்தர ராஜு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளராக இருந்த நிலையில், அந்தப் பதவி பானோத் ம்ருகேந்தர் லாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications