Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மந்திரம் கற்போம்.. தந்திரம் கற்போம்.." பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலை, மனித குலத்தின் திறனுக்கு சான்றாக உள்ளது என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசினார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று வரவேற்றனர். அப்போது ஜனாதிபதிக்கு ஒடியா மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் புத்தகத்தை முதல்வர் பரிசாக அளித்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்மு அங்கு ஓய்வு எடுத்தார்.

Tamil Nadu has a rich culture and civilization, President draupadi murmu speech

அதன்பிறகு இன்று காலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். விழாவில், 762 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். கவுரவ டாக்டர், முனைவர் பட்டங்களை பெறுவோர் மற்றும் படிப்பில் பதக்கங்களை பெற்றோருக்கு திரெளபதி முர்மு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அருகருகே நின்றனர். இந்த விழாவின் முடிவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசினார். ஜனாதிபதி பேசியதாவது:- வளமான கலாசாரம், நாகரிகத்தை கொண்டது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலை, மனித குலத்தின் திறனுக்கு சான்றாக உள்ளது திருக்குறள் பல நூற்றாண்டுகளுக்கு அனைவரது வாழ்வுக்கும் வழிகாட்டியாக உள்ளது.

Tamil Nadu has a rich culture and civilization, President draupadi murmu speech

சென்னை பல்கலைகழகத்தில் படிக்கும் 1.18 லட்சம் பேரில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை பல்கலைக்கழகம், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், விவி கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்களை நமக்கு அளித்துள்ளது. கல்வியை மேம்படுத்துவதில் முன்னோடியாக சென்னை பல்கலைக்கழகம் உள்ளது. மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது.

நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். சவால்களை சமாளிக்கும் உறுதியை மாணவர்கள் பெற வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் மிகப்பெரும் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தின் நிலை மேம்பட்டு வருகிறது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் ஒன்றை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். மந்திரம் கற்போம்.. தந்திரம் கற்போம்.. வானை அளப்போம்.. விண்மீனை அளப்போம்.. என்ற அவருடைய பாடல் உங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+