"மந்திரம் கற்போம்.. தந்திரம் கற்போம்.." பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
சென்னை: தமிழ்நாட்டின் கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலை, மனித குலத்தின் திறனுக்கு சான்றாக உள்ளது என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசினார்.
ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று வரவேற்றனர். அப்போது ஜனாதிபதிக்கு ஒடியா மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் புத்தகத்தை முதல்வர் பரிசாக அளித்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்மு அங்கு ஓய்வு எடுத்தார்.

அதன்பிறகு இன்று காலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். விழாவில், 762 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். கவுரவ டாக்டர், முனைவர் பட்டங்களை பெறுவோர் மற்றும் படிப்பில் பதக்கங்களை பெற்றோருக்கு திரெளபதி முர்மு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அப்போது ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அருகருகே நின்றனர். இந்த விழாவின் முடிவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசினார். ஜனாதிபதி பேசியதாவது:- வளமான கலாசாரம், நாகரிகத்தை கொண்டது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலை, மனித குலத்தின் திறனுக்கு சான்றாக உள்ளது திருக்குறள் பல நூற்றாண்டுகளுக்கு அனைவரது வாழ்வுக்கும் வழிகாட்டியாக உள்ளது.

சென்னை பல்கலைகழகத்தில் படிக்கும் 1.18 லட்சம் பேரில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை பல்கலைக்கழகம், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், விவி கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்களை நமக்கு அளித்துள்ளது. கல்வியை மேம்படுத்துவதில் முன்னோடியாக சென்னை பல்கலைக்கழகம் உள்ளது. மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது.
நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். சவால்களை சமாளிக்கும் உறுதியை மாணவர்கள் பெற வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் மிகப்பெரும் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தின் நிலை மேம்பட்டு வருகிறது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் ஒன்றை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். மந்திரம் கற்போம்.. தந்திரம் கற்போம்.. வானை அளப்போம்.. விண்மீனை அளப்போம்.. என்ற அவருடைய பாடல் உங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications