பிப்.17 இல் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்! அப்பாவு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் முடியவுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மரபு.

இந்த பட்ஜெட்டில் என்னென்ன இடம் பெறலாம் என்பது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியது. இதனால் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கூடும் என்றும் அன்றைய தினமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இது முடிந்ததும் அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்தலாம் என ஆலோசனை செய்யும். வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி முன்பணக் கோரிக்கை செய்யப்படும்.












Click it and Unblock the Notifications