நம்பர் 1 தமிழ்நாடு.. இந்தியாவிலேயே சென்னை டாப்.. எதில் தெரியுமா? மாற்றத்தை நோக்கி இளைஞர்கள்.. சபாஷ்
சென்னை: தேசிய அளவிலான தனிநபர் செலவுகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதில் தமிழ்நாடு குறித்த பிரத்யேக தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
நம்முடைய நாட்டில் தனி நபர் செலவினங்கள் குறித்த, குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு [Human consumption expenditure survey -HCES ] அறிக்கையாக வெளியிடப்படுவது வழக்கமாகும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு: இதுபோன்று ஆண்டுதோறும் வெளியிடப்படும், செலவின அறிக்கையானது, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தையும், அவர்களின் வறுமை நிலையையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறிய முக்கிய ஆதாரமாக உள்ளது. அந்தவகையில், 2022-23-ம் ஆண்டு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்தும் சில தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை இவைதான்:
"இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது. தனி நபர் அதிக செலவு செய்யும் பட்டியலில், சில மாநிலங்களே உள்ளன.. இதில், தமிழ்நாடும் ஒன்றாகும்.
தனிநபர் செலவினம்: கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் தனி நபர் செலவினம் நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளது.. இதுவே கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டைபொறுத்தவரை, நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள்.. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகர்ப்புறத்தில் சராசரியாக ஒருநபரின் செலவினம் ரூ.7,630 ஆகவும், கிராமப்புறத்தில் ஒரு நபரின் செலவினம் ரூ.5,310 ஆகவும் உள்ளது..
கிராமப்புற செலவு: அதாவது, தேசிய அளவில் நகர்ப்புற கிராமப்புற செலவின வித்தியாசம் 71 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் அந்த வித்தியாசம் வெறும் 44 சதவீதமாக இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது கல்விதான்.. தமிழகத்தில் நகர்ப்புறத்துக்கு ஈடாக கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களுக்கும் போதுமான அளவு கல்வி கிடைக்கிறது.. இதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.. அதனால், தமிழகத்தில் நகர்ப்புறத்துக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் தனி நபர் செலவினங்கள் உள்ளன. அதேபோல, கலாச்சார மாற்றங்களும் தனி நபர் செலவினத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆடைகள்: அந்தவகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உடுத்தும் ஆடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை முந்தைய காலத்தில் குறைவாக இருந்தன. ஆனால், இப்போது அவர்களும் விதவிதமான ஆடைகள், உணவுகள், பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்த துவங்கவிட்டனர்.. மொத்தத்தில், இளைஞர்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாற்றத்தை கண்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications