பாலஸ்தீனியர்களுக்காக 1 நாள் நோன்பு நோற்போம்! தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள்!
சென்னை: பாலஸ்தீனியர்களுக்காக வரும் 26ஆம் தேதி அன்று நோன்பு நோற்குமாறு இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''ஃபலஸ்தீனை அநியாயமாக அபகரித்து தொடர்ந்து மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் இஸ்ரேலிடமிருந்து புனிதப்பள்ளிவாசல் அல் அக்ஸாவை மீட்கவும் ஃபலஸ்தீன விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடிவரும் ஃபலஸ்தீன விடுதலைப் போர் வீரர்கள் சமீபத்தில் இஸ்ரேலின் மீது தாக்குதல் தொடுத்தனர்.''
''அதன் தொடர்ச்சியாக ஃபலஸ்தீன விடுதலைப்போர் வீரர்களை தாக்குகிறோம் எனும் பெயரில் காஸாவிலுள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து கண்மூடித்தனமாக கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் மூலம் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இதுவரை ஷஹீதாகியுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் அநியாயத்தின் உச்சம்.''
''காஸாவில் வசிக்கும் நம் சகோதரர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும், தங்குமிடம், உணவு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குக்கூட கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவது நம் நெஞ்சைப் பிளக்கிறது. இச்சமயத்தில் சர்வதேச சமுதாயத்தின் அமைதி இன்னும் கொடுமையானது.''
''பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு இறைவனின் பேருதவி கிடைத்திடவும் புனித பள்ளிவாசல் அல் - அக்ஸா மீட்புக்காகவும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் மீண்டும் வரும் 26.10.2023 வியாழன் அன்று நோன்பு நோற்று கட்டாயம் அஸர் தொழுகை முடிந்தவுடன் அதே இடத்தில் அமர்ந்து திக்ர் இஸ்திக்பார் செய்து இஃப்தார் நேரத்தில் உருக்கமாக நீண்ட துஆவைச் செய்திடுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்பிற்கினிய இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.''

''இதுபற்றி உலமாப்பெருமக்கள் வரும் ஜும்ஆவிலும் அதற்குப் பின்பும் தொடர்ந்து அறிவிப்புச் செய்யுமாறும் மஸ்ஜிதுகளின் கண்ணியத்திற்குரிய நிர்வாகப்பெருமக்கள் அன்றைய தினம் இஃப்தாருக்கான ஏற்பாடுகளை அல்லாஹ்விற்காக செய்து கொடுக்குமாறும் மிகுந்த அன்புடன் வேண்டுகிறோம். இது நாம் நம் சகோதரர்களுக்குச் செய்யும் மிகக் குறைந்தபட்ச உதவியே.''
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications