நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சொத்து பரிவர்த்தனைகளில் நீண்டகாலமாக நிலவும் அச்சம் மற்றும் சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அரசு முக்கிய சீர்திருத்தத்தை கொண்டு வர தயாராகி வருகிறது. நில உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் இடையேயான கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தை (Joint Development Agreement - JDA) முறைப்படுத்தி அதை கட்டாயமாக்கும் புதிய நடவடிக்கையை பதிவுத்துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மாற்றம் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதோடு, வீடு வாங்கும் நுகர்வோருக்கு வலுவான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Real Estate tvk

தற்போதைய நடைமுறையில், நிலத்தின் உரிமையாளரும் டெவலப்பரும் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வணிக வளாகம் கட்டும் போது பெரும்பாலும் 'பவர் ஆஃப் அட்டர்னி' (PoA) மூலமே பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த பழைய முறையால் பல்வேறு சட்ட சிக்கல்கள், கட்டுமான தாமதங்கள், பண மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பிரச்சனைகள் அடிக்கடி எழுந்துள்ளன.

இதனைத் தவிர்க்கும் விதமாக புதிய JDA முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் நில உரிமையாளர் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் பொறுப்புகள், நிதிக் கடமைகள், பங்கு விகிதங்கள் ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படும். மேலும், கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்க வேண்டிய காலக்கெடு உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகளும் ஒப்பந்தத்தில் இடம் பெறும்.

பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "JDA ஒப்பந்தம் PoA உடன் இணைக்கப்பட்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறும். இது வங்கிகளுக்கு செல்லுபடியாகும் ஆவணமாக அமையும். டெவலப்பர்கள் முன்னணி வங்கிகளில் எளிதில் கடன் பெற முடியும். வாடிக்கையாளர்களும் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் முதலீடு செய்ய முடியும்" என்றார்.

ரியல் எஸ்டேட் துறையினர் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்கள், JDA பதிவை உடனடியாக கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளன. டெவலப்பரின் பங்குக்கு நில மதிப்பில் வெறும் 1 சதவீத முத்திரைத் தீர்வை மட்டும் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தங்களின் மொத்த செலவு கணிசமாகக் குறையும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பழைய கட்டிடங்கள் மறுசீரமைப்பு (Redevelopment) திட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய முறை மிகவும் அவசியமானதாக உள்ளது. தற்போது JDA ஆவணங்கள் சரியாக பதிவு செய்யப்படாததால் பல வங்கிகள் டெவலப்பர்களுக்கு கடன் வழங்க மறுப்பதாக கிரெடாய் சென்னை பிரிவு தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டின் கட்டுமானத் துறை வளர்ச்சியை பாதித்து வருகிறது.

இந்த சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், சொத்து வாங்குபவர்கள் மோசடி அபாயத்திலிருந்து பெரிதும் தப்பிக்கலாம். ஒப்பந்தத்தில் உள்ள தெளிவான விதிமுறைகள் காரணமாக தாமதங்கள் குறையும். மேலும், அரசுக்கு வரி வருவாயும் சீராக அதிகரிக்கும். தமிழ்நாட்டின் சொத்துப் பதிவு அமைப்பில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை சரி செய்ய இந்த நடவடிக்கை முதல் படியாக அமையும் என்று துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த மாற்றம் ரியல் எஸ்டேட் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சென்னை, கொச்சி, பெங்களூரு போன்ற நகரங்களுடன் போட்டியிடும் வகையில் தமிழ்நாடு தனது சொத்து சந்தையை வலுப்படுத்தும் வாய்ப்பைப் பெறும். நுகர்வோர், டெவலப்பர்கள், வங்கிகள் மற்றும் அரசு என அனைத்து தரப்பினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அரசு விரைவில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உள்ளது. இந்த சீர்திருத்தம் தமிழ்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையை உலக தரத்துக்கு உயர்த்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+