Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகக் காவல்துறையின் மிக முக்கியப் பிரிவான மாநில உளவுத்துறைக்கு, வரலாற்றிலேயே முதன்முறையாக பாலநாகதேவி என்ற ஒரு பெண் அதிகாரியைத் தலைவராக நியமித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. யார் இவர் என்பதை பார்க்கலாம்.

தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் நேற்று இதற்கான அதிரடி மாற்ற உத்தரவைப் பிறப்பித்தார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

balanagadevi ips

யார் இந்த பாலநாகதேவி?

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள லக்தி காபுல் பகுதியைச் சேர்ந்த பாலநாகதேவி, பி.டெக் பட்டதாரி ஆவார். 1995-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்த இவர், கடந்த 29 ஆண்டுகளாகக் காவல்துறையின் பல்வேறு சவாலான பொறுப்புகளைத் திறம்பட வகித்துள்ளார்.

இதற்கு முன்பு, பொருளாதாரக் குற்றப்பிரிவு சி.ஐ.டி. (EOW CID) டி.ஜி.பி-யாகப் பணியாற்றி வந்தார். கமாண்டோ படைத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது பதவிக்காலத்தில், ஊமஞ்சேரியில் நடைபெற்ற அகில இந்தியப் போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திக் காட்டினார்.

பதவி மாற்றங்கள்

முன்னதாக, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக இருந்த ராமானுஜம், சுமார் ஒரு ஆண்டு காலம் உளவுத்துறைப் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். தற்போது உளவுத் துறைக்கு என்று முழுநேரத் தலைவராக பாலநாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற அதிகாரிகள் மாற்றம்

பாலநாகதேவி உளவுத்துறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு சி.ஐ.டி. தலைவராக ஐ.ஜி. சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் (இந்த பதவி டி.ஜி.பி அந்தஸ்திலிருந்து ஐ.ஜி அந்தஸ்துக்குக் குறைக்கப்பட்டுள்ளது). அதேபோல், குடிமைப்பொருள் வழங்கல் சி.ஐ.டி. தலைவராக ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உளவுத்துறையின் ரகசியங்களை நிர்வகிக்கும் இந்தப் பொறுப்பில் ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால், காவல்துறை வட்டாரத்தில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் இப்பிரிவு பெரும்பாலும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-க்களின் கூடுதல் பொறுப்பாகவோ அல்லது ஆண் அதிகாரிகளின் தலைமையிலோ இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதுரையின் முதல் பெண் டி.ஐ.ஜி

கடந்த 2012-ஆம் ஆண்டு, மதுரை சரகத்தின் முதல் பெண் டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டு சாதனை படைத்தார். தென் மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் இவரது பங்கு அப்போது பெரிதும் பேசப்பட்டது.

நீலகிரி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியபோது மலைப்பகுதிகளில் நிலவும் சவாலான பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டார். கோவை மண்டல டி.ஐ.ஜி-யாக பணியாற்றி குற்றங்களைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றினார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) உளவுப்பிரிவிலும் பணியாற்றி, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

சவாலான கமாண்டோ படைப் பிரிவு

காவல்துறையின் மிக உயரியப் பிரிவான கமாண்டோ படைத் தலைவராக பணியாற்றியபோது, ஊமஞ்சேரியில் நடைபெற்ற அகில இந்தியத் துப்பாக்கி சுடும் போட்டியை மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்து நடத்தினார். இவரது நிர்வாகத் திறமைக்கு இது ஒரு சான்றாக அமைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+