Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கே சி வீரமணி வீட்டுக்கு விரைந்து வந்த பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம்.. சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது சட்ட திட்டங்களுக்கு புறம்பாக இருப்பதாகவும், இந்த குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கே.சி. வீரமணி மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம் - வழக்கறிஞர் செல்வம்

    வேலூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை , திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக திருப்பத்தூரில் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ், ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ், 3) ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் அமைந்துள்ள கேசி வீரமணி வீடு, பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள வீரமணியின் மற்றொரு வீடு ஆகியவற்றில் சோதனை நடக்கிறது.

    யார் யார் வளையத்தில்

    யார் யார் வளையத்தில்

    இதேபோல் கேசி வீரமணியின் தம்பி காமராஜ் வீடு, கேசி வீரமணியின் அண்ணன் அழகிரி வீடு, வீரமணியின் குடும்பத்தைச் சார்ந்த பிடி மண்டி என்பவரது வீடு, தமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் வீடு, திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் வீடு, ஏலகிரி கிராமத்தில் அமைந்துள்ள அதிமுக மகளிர் அணி தலைவியான சாந்தி வீடு, ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம், நாட்றம்பள்ளி மல்லகுண்ட பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா என்பவரது வீடு. நாட்றம்பள்ளி பகுதியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் சாமராஜ் என்பவரது வீடு, நாட்றம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ் என்பவரது வீடு , ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீட்டில் என சுமார் 14 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    பார் கவுன்சில் செல்வம்

    பார் கவுன்சில் செல்வம்

    சென்னை சாந்தோமில் உள்ள முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திவரும் சோதனையை நேரில் சென்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம், பார்வையிட்டார். கேசி வீரமணியின் மனைவி, குழந்தைகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க வந்ததாகவும் சொன்ன பிறகும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    முதல் தகவல் அறிக்கை

    முதல் தகவல் அறிக்கை

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருப்பதாகவும், அதற்கான முறையான சான்றுகளை அளிக்க கே சி வீரமணியின் குடும்பத்தினர் தயாராக இருந்தும், இதுபோன்ற சோதனை நடவடிக்கை எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அராஜக போக்கு

    அராஜக போக்கு

    மேலும் சோதனை நடைபெறும் வீடு அமைந்திருக்கும் சாலை முழுவதும் காவல்துறை தடுப்பு வேலிகள் அமைத்து இருப்பதாகவும், யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்காதது காவல்துறையின் அராஜக போக்கை காட்டுவதாகவும் செல்வம் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+