பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
Recommended Video

சென்னை: பெரியார் பெயரை ஜாதியோடு சேர்த்து குறிப்பிட்டு கேள்வித் தாள் வழங்கியதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்களுக்காக குரூப்2 தேர்வு நேற்று, 2 ஆயிரத்து 268 மையங்களில் நடைபெற்றது.

இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்ற கேள்விக்கு தரப்பட்ட 4 விடைகளில், தந்தை பெரியாரின் பெயர் இ.வெ.ராமசாமி நாயக்கர் என இன்ஷியல் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது.
அதே கேள்விக்கு வழங்கப்பட்ட பிற ஆப்ஷன்களில், காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணாதுரை என்று தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடப்பட்ட நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது ஏன்? என கேள்வி எழுந்தது.

ஜாதி ஒழிப்பு போராளியான பெரியாரை ஜாதி வட்டத்திற்குள் அடைத்து, அதன் மூலம், மீண்டும் ஜாதி ஆதிக்க ஆதாயம் பெற சில ஆதிக்க வெறி சக்திகள் சமீபகாலமாக செயல்பட்டு வருகின்றன. இவை கல்வித்துறையிலும் கரம் பதித்துவிட்டன என்ற கேள்வியை இந்த வினாத்தாள் எழுப்பியிருந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட, பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் இதற்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
[ஈ.வெ.ராமசாமி நாயக்கர்.... குரூப் 2 தேர்வு வினாவில் விஷமம்... தேர்வர்கள் புகார்!]
இந்த நிலையில், குரூப்2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிக்கையில் தெரிவித்துள்ளது. வினாத்தாள் மிகுந்த கவனத்தோடு தயாரிக்கப்பட்டும், தந்தை பெரியாரின் பெயரை தவறாக குறிப்பிட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications