சர்க்கரை அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. ரேஷன் வாங்கிட்டீங்களா? ரேசன் கடை ஊழியர்கள் சொல்றதை பாருங்க
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர்.. என்ன காரணம்?
ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மற்றும் ஊக்கத்தொகை, சிறப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.. இது தொடர்பான அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டும், நிறைவேற்றியும் வருகிறது. ஆனாலும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன..

பணியாளர்கள்: குறிப்பாக, பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், தரமற்ற பொருட்களுக்காக நியாய விலை கடை பணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலங்களாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2 வருடத்துக்கும் மேலாகவே, போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதனால், இன்றைய தினம் மறுபடியும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.. இன்று 13ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறார்கள்.
எடை மோசடி: பொது வினியோக திட்டத்தில் மக்களுக்கு பயோமெட்ரிக் பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 2016ல் விற்பனை முனையங்கள் வழங்கப்பட்டன. அதனை மேம்படுத்தி வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.. எடை மோசடியை தவிர்க்க அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும் என்று கோருகிறார்கள்.
பல மாவட்டங்களில் பொருட்களை ரேஷன் கடைகளில் இறக்க கட்டாய இறக்கு கூலி வசூலிக்கப்படுகிறதாம்.. பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் கேட்கும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இன்றைய தினம் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த போகிறார்களாம்.
எதிர்பார்ப்பு: ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதால், இவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications