ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு ஆசியாவில் நிலவும் கடுமையான போர்ச் சூழல் மற்றும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியை பெரிதும் பாதித்துள்ளது. இதன் நேரடி விளைவாக தமிழ்நாட்டில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பல தார் (பிடுமன்) தட்டுப்பாட்டாலும், அதன் விலை கடுமையாக உயர்வதாலும் பாதியிலேயே முடங்கும் அபாயத்தில் உள்ளன.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் தகவலின்படி, மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தல் பணிகள், புதிய சாலை அமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் வழக்கமான பராமரிப்புப் பணிகள் அனைத்தும் கடும் தாமதத்தை சந்தித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) வழங்கும் தார் விநியோகம் பெருமளவு குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

iran vijay

முக்கிய திட்டங்கள் பாதிப்பு

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் (CMRDS), சென்னை-கன்னியாகுமரி தொழில்வழிச் சாலைத் திட்டம் (CKICP), முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (CMVRDS) உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இருவழிப் பாதைகளை நான்கு வழிப் பாதைகளாக மாற்றும் பணிகள், பாலங்கள் வலுப்படுத்தல், புதிய வழித்தடங்கள் உருவாக்கம் போன்றவை பல இடங்களில் ஸ்தம்பித்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

VG-30 தார் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன?

சாலை கட்டுமான வல்லுநர்கள் கூறுகையில், நெடுஞ்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் 'விஸ்காசிட்டி கிரேடு-30' (VG-30) ரக பிடுமனுக்கு குறிப்பிட்ட தரம் வாய்ந்த கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. மேற்கு ஆசியப் போர் காரணமாக இந்தியா 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாற்று மூலங்கள் வழியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. ஆனால், சில நாடுகளின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது VG-30 தரத்தின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது என சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் மூன்று வகை தார்களை உற்பத்தி செய்கின்றன. VG-10 கிராமப்புற சாலைகளுக்கும், VG-30 மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும், VG-40 விமான நிலைய ஓடுதளங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான முக்கிய சாலைத் திட்டங்களுக்கு VG-30 தான் முதுகெலும்பு என்பது குறிப்பிடத்தக்கது.

விலை இரட்டிப்பு - ஒப்பந்ததாரர்கள் நஷ்டம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக VG-30 தார் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதம் வரை ஒரு டன் VG-30 தாரின் விலை ₹45,000 முதல் ₹55,000 வரை இருந்த நிலையில், தற்போது ₹95,000 முதல் ₹1,05,000 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ஒப்பந்ததாரர்களை பெரும் நஷ்டத்தில் தள்ளியுள்ளது. திட்ட மதிப்பீடுகளும் தலைகீழாக மாறியுள்ளன.

அரசின் நிலைப்பாடு

விலை உயர்வைச் சுட்டிக்காட்டி கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி ஒப்பந்ததாரர்கள் மனு அளித்து வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ஒப்பந்த காலக்கெடுவுக்குள் பணிகளை முன்னெடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே விலை உயர்வை கருத்தில் கொண்டு திட்ட மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய அரசு பரிசீலிக்கும். ஒப்பந்த காலத்தை மீறி தாமதப்படுத்துபவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது" என்றார்.

மேற்கு ஆசியப் பதற்றம் தணிந்து, கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் வரை தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களில் இந்த தொய்வு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அரசு மாற்று தீர்வுகளை விரைவாக கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+