தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 4,276 பேருக்கு புதிய தொற்று
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,276 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 9,15,386 பேராக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,869 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாநிலம் முழுவதும் இன்று கொரோனாவிற்கு 4,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,15,386 பேராக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,869 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் இதன் மூலம் 8,72,415 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 30,131 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் 11 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,840 பேராக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 260 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 84,658 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,99,30,436 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் 427 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 398 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. திருவள்ளூரில் 199 பேருக்கும், திருப்பூரில் 154 பேருக்கும் தஞ்சாவூரில் 125 பேருக்கும் திருச்சியில் 131 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications