ஜூன் 13க்கு பிறகு.. ஆரம்பமாகும் புதிய 'அரசியல் ஆட்டம்' - மு.க.ஸ்டாலின் தயாரா?
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக சந்தித்த தோல்வியின் எதிரொலியாக, சசிகலாவை அதிமுகவுடன் இணைக்கும் படலத்தை மணிக்கு 400 கி.மீ வேகத்தில் டெல்லி கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தோல்வி அதிமுகவை பத்தாண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக உட்கார வைத்திருக்கிறது. ஜெயலலிதா எனும் 'சென்ட்ரிக் ஃபோர்ஸ்' இல்லாத கட்சியாக தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு, தோல்வியே கிடைக்கும் என்பதை தலைமையும் அறியாமல் இல்லை.
'இவர்கள் எங்களை ஆள வேண்டும்' என்பதை விட, 'இவர்கள் எங்களை ஆள கூடாது' என்று பப்ளிக் மத்தியில் நிலவிய ;பொது மனப்பான்மை' இந்த தோல்வியின் முக்கிய காரணங்களில் ஒன்று என இரட்டைத் தலைமைக்கு தேர்தலுக்கு பிந்தைய ரிப்போர்ட்டாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

பொங்கிய ஓ.பி.எஸ்
எனினும், கட்சியின் இந்த தோல்வியால் ஆட்சியை இழந்தாலும், 'நாம் சேஃப்' என்ற மைண்ட்செட்டில் தான் எடப்பாடி தரப்பு இருக்கிறது. அதிமுக வெற்றிப் பெற்ற 65 இடங்களில் பாதிக்கு மேல் கொங்கு மண்டலத்திலிருந்து கிடைத்திருப்பது தான் இதற்கு காரணம். இந்த ஒரு பாஸிட்டிவ் காரணத்தை வைத்தே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு தான் என ஈ.பி.எஸ் தரப்பு ஃபிக்ஸ் செய்துவிட்டது. அதேசமயம், 'முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து, இத்தனை ஆண்டுகள் பொறுமையாக இருந்த நான், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விட்டுக் கொடுக்கணுமா?' என்று ஓ.பி.எஸ். தரப்பு பொங்க ராயப்பேட்டையில் டபுள் 'கத்திரி' வீசுவதாக தகவல்.

மிஷன் 2026
ஒருபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற போட்டி நிலவ, மறுபக்கம் 'அப்படி ஓரமா சண்டை போடுங்கப்பா' என்று 2026 ஃபோகஸை இப்போதே தொடங்கிவிட்டதாம் டெல்லி தரப்பு. மு.க.ஸ்டாலின் இன்னும் பதவி கூட ஏற்காத நிலையில், 'மிஷன் 2026'-க்கு இத்தனை அவசரம் காட்டுவதன் ஒரே காரணம் 'சசிகலா' தான் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். தேர்தலுக்கு முன்பே, சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று இரவுகள் தங்கியிருந்து, சசிகலா இணைப்புக்கு அமித் ஷா எவ்வளவோ பிரைன் வாஷ் செய்தும், எடப்பாடியார் அசைந்து கொடுக்கவில்லை. அதன் விளைவு, பல தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை அமமுக தடுத்து, வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு அள்ளிக் கொடுத்தது. சசிகலா மட்டும் அதிமுகவுடன் இணைந்திருந்தால், திமுகவின் ரிசல்ட் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கும் என்ற தகவலும் டெல்லிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ட்ரோல் போயிடும்
இந்த அனைத்து தகவல்களையும் கையில் வைத்துக் கொண்டு டெல்லிக்கு பேசிய ஓ.பி.எஸ். டீம், "வன்னியர்கள் இட ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் பிரச்சனை-னு தென் மாவட்டங்கள்-ல கட்சியின் மீது நிலவிய பலத்த எதிர்ப்பையும் மீறி அங்கு 20 தொகுதிகளில் ஜெயிச்சிருக்கோம். இந்த எதிர்ப்புகளுக்கு ஒரே காரணம் எடப்பாடி பழனிசாமி தான். அவர் தேவையில்லாத விவகாரங்கள கையில எடுத்து, அதிமுக கோட்டையாக இருந்த தென் மாவட்டங்கள்-ல பெரும் சரிவை கொடுத்துட்டார். ஆனால், கொங்கு மண்டலத்தில் தனக்கிருந்த ஆதரவை காட்டி கட்சியை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அவருட்ட போயிடும் போல இருக்கு. கட்சி மொத்தமா அவர் கண்ட்ரோல்ல போச்சுன்னா அடுத்த தேர்தலையும், கொங்கு தாண்டி எங்கயும் ஜெயிக்க முடியாது" என்று வேதனையை கொட்டித் தீர்த்திருக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு.

சசிகலா தலைமை
இந்த சூழலில் தான் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சை மாநகரின் முக்கிய 'தலைக்கட்டு'களில் ஒருவரான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசிக்கும் வரும் ஜூன் 13ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருமணம் நடைபெறுகிறது. தலைமை தாங்கப் போவது சசிகலா. இதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது மன்னார்குடி குடும்பம். கொரோனா காலம் என்பதால், துளி களேபரம் இன்றி திருமணத்தை நடத்த வேண்டும் என்று, தேர்தல் களத்தை விட திருமண களத்தில் சூறாவளியாக சுழன்று வருகிறாராம் டிடிவி. அதுவும், சசிகலா மேற்பார்வையில். ஸோ, ஒட்டுமொத்த குடும்பமும் திருமண வேளைகளில் மூழ்கியிருக்க, ஓ.பி.எஸ். தரப்புக்கு டெல்லியில் இருந்து முக்கிய தகவல்கள் சில பறந்துள்ளனவாம்.

சூடு பிடிக்கும்
அதில், ஜூன் 13ம் தேதி வரை அமைதி காக்கும் படி இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப்பட, அமைதியாக ஓ.பி.எஸ். ஆமோதித்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைவர் போஸ்ட் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும், '2026' டார்கெட்டே முக்கியம் என்பதால், அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்பது அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டுள்ளதாம். குறிப்பாக, சசிகலாவை அதிமுகவில் இணைப்பதே முதல் பணி என்றும், இதற்கான 'கன்வின்ஸ்' படலம் விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். எனவே, ஜூன் 13ம் தேதிக்கு பிறகு, சசிகலாவை மையப்படுத்திய அரசியல் ஆட்டங்கள் தமிழகத்தில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications