தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அவசரமாக தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

தினசரி 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தினசரி 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ரெம்டெசிவர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    20 லட்சம் தடுப்பூசிகள் அவசரம்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

    நாடு முழுவதும் தினசரியும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரியும் கொரோனாவிற்கு 12 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் தினசரி 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ரெம்டெசிவர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தமிழக தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 50 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தினசரியும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதால் உடனடியாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள முதல்வர் பழனிசாமி, உடனடியாக 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்புங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்துகளை தமிழகத்திற்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+