"பர்ஃபெக்ட்".. இந்த மாவட்டங்கள்தான் ஹாட் ஸ்பாட்.. "பல்ஸ்" பார்த்து சொன்ன வெதர்மேன்.. எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாடு மழை தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக வலுவடைந்து வருகிறது.
தற்போது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

எங்கே இருக்கிறது
இந்த நிலையில் தமிழ்நாடு மழை தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது கிழக்கு வடகிழக்கு இலங்கை பகுதியில் உள்ளது. நமது கடல் பகுதியில் இருந்து இன்னும் தாழ்வு பகுதி தூரத்தில்தான் இருக்கிறது. தற்போது கடலோர மாவட்டங்களில் நல்ல கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் தற்போது நல்ல கனமழை பெய்து வருகிறது. இன்று டெல்டா முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும். அருகில் உள்ள மாவட்டங்களான விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

உள்மாவட்டங்கள்
இந்த தாழ்வு பகுதி நாகை கடலோர பகுதியை நோக்கி நகரும் போது, காற்று உள் மாவட்டங்களை நோக்கி செல்லும். அந்த நேரத்தில்தான் உள்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். அதுவரை அந்த மாவட்டங்களில் லேசான மழையே பெய்யும். தற்போது உள்ள காற்று அடிப்படையில் மழை கடலோர மாவட்டங்களில் மட்டுமே பெய்யும். அதனால் மேற்கு, தெற்கு மற்றும் உள் மாவட்ட மக்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு லேசான மழையே இன்று பெய்யும்.

கேரளா
இந்த தாழ்வு பகுதி அரபிக்கடலை நோக்கி ஒரு பல்ஸை நகர்த்தும். இதனால் கேரள கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு தீவிரம் அடைந்து, பின்னர் நகர்ந்து உள்ளது. இதன் காரணமாக நமக்கு 13 மற்றும் 14ம் நாட்களில் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை முதல் நாள் 6-9 செமீ அளவிற்கு சிட்டியில் பல இடங்களில் மழை பெய்து உள்ளது. 11-14ம் தேதி வரை 30 செமீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

மழை அளவு
இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் இன்னும் கனமழை பெய்யும். அப்போதுதான் டார்கெட்டை மழை தொடும். சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பிரேக் எடுத்து பிரேக் எடுத்து பெய்யும். இரவு நேரங்களில் எப்போதும் போல மழை தீவிரமாக பெய்யும். மழையின் தீவிரம் மாறும். பகலிலும் திடீரென தீவிர கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது சென்னையில் இருந்து பல நூறு கிமீகள் தூரத்தில்தான் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications