தமிழ் புத்தாண்டு.. சென்னையில் இருந்து 4 சிறப்பு ரயில்கள்.. தென் மாவட்ட பயணிகள் உடனே டிக்கெட்டை போடுங்க
சென்னை: தமிழ் புத்தாண்டு, கேரளாவில் விஷு புத்தாண்டையொட்டி தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தென்காசிக்கும், சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதேபோல, கேரளாவில் விஷு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கோடை விடுமுறை உள்ள நிலையில், தமிழ் புத்தாண்டு நாளினை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் விரும்புவார்கள்.

தெற்கு ரயில்வே அறிவிப்பு
இதனால், பயணிகள் முன்கூட்டியே ரயில், பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் முன்கூட்டியே புக்கிங் செய்ய தொடங்கினர். இதனால், தமிழ் புத்தாண்டு நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.
இதனால் ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவிக்குமா? என்ற எதிர்பர்ப்பு பயணிகள் மத்தியில் நிலவிய நிலையில், தென் மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:-
தென்காசி, கொல்லத்திற்கு சிறப்பு ரயில்
* தென்காசியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
* சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கும் (வண்டி எண் 06119) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வரும் 15 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும். மறுமார்க்கத்தில் கொல்லத்தில் (வண்டி எண் 06120) இருந்து 16 ஆம் தேதி சென்னைக்கு ரயில் புறப்படுகிறது.
எழும்பூர் டூ திருவனந்தபுரம், தூத்துக்குடி
* ஏப்ரல் 13 சென்னை - தூத்துக்குடிக்கும், மறுநாள் ஏப்ரல் 14 ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஏப்ரல் 10 ல் எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏப்ரல் 15 ல் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications