Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு.. சென்னையில் இருந்து 4 சிறப்பு ரயில்கள்.. தென் மாவட்ட பயணிகள் உடனே டிக்கெட்டை போடுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டு, கேரளாவில் விஷு புத்தாண்டையொட்டி தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தென்காசிக்கும், சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதேபோல, கேரளாவில் விஷு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கோடை விடுமுறை உள்ள நிலையில், தமிழ் புத்தாண்டு நாளினை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் விரும்புவார்கள்.

Tamil New Year 4 Special Trains from Chennai - Southern Districts Book Your Tickets Now

தெற்கு ரயில்வே அறிவிப்பு

இதனால், பயணிகள் முன்கூட்டியே ரயில், பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் முன்கூட்டியே புக்கிங் செய்ய தொடங்கினர். இதனால், தமிழ் புத்தாண்டு நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.

இதனால் ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவிக்குமா? என்ற எதிர்பர்ப்பு பயணிகள் மத்தியில் நிலவிய நிலையில், தென் மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:-

தென்காசி, கொல்லத்திற்கு சிறப்பு ரயில்

* தென்காசியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

* சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கும் (வண்டி எண் 06119) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வரும் 15 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும். மறுமார்க்கத்தில் கொல்லத்தில் (வண்டி எண் 06120) இருந்து 16 ஆம் தேதி சென்னைக்கு ரயில் புறப்படுகிறது.

எழும்பூர் டூ திருவனந்தபுரம், தூத்துக்குடி

* ஏப்ரல் 13 சென்னை - தூத்துக்குடிக்கும், மறுநாள் ஏப்ரல் 14 ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஏப்ரல் 10 ல் எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏப்ரல் 15 ல் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+