அன்று பழனியில் வங்கி ஊழியர்... இன்று மேற்கு வங்கத்தில் உதவி ஆட்சியர்... சாதித்த தமிழ் ஓவியா
திண்டுக்கல்: கல்லூரி படிப்பை முடித்து வங்கியில் பணியை தொடங்கிய இளம்பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, முறையாக பயிற்சியும் முடித்து தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உதவி ஆட்சியராக பதவியேற்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவரது மகள் தமிழ் ஓவியா தோட்டக்கலைத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை கல்லூரியில் படிப்பை முடித்த தமிழ் ஓவியா, பழனியில் உள்ள கனரா வங்கியில் ஏ.எஃப்.ஓ.வாக (அஸிஸ்டெண்ட் அக்ரிகல்ச்சர் பீல்டு ஆஃபிஸர்) பணியில் சேர்ந்து ஒரு வருடம் பணியாற்றி வந்திருக்கிறார்.

இந்நிலையில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த தமிழ் ஓவியா, கனரா வங்கியில் பணியாற்றிக்கொண்டே முதன்மைத் தேர்வுக்கு தயாராகி உள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, மெயின் தேர்வுக்கான பயிற்சியை சென்னையில் பெற வேண்டி இருந்ததால் தனது வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் ஐ.ஏ.எஸ். பிரதான தேர்வுக்கு தன்னை தயார் படுத்தி வந்துள்ளார்.
தமிழ் ஓவியாவின் வைராக்கியமும், தொடர் முயற்சியும் அவரை ஐ.ஏஸ்.எஸ். தேர்வில் மேற்குவங்க கேடரில் தேர்ச்சி பெற வைத்தது. இதையடுத்து முசோரியில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடித்த அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சவுத் 22 பர்கானா என்ற மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனிடையே இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ் ஓவியா ஐ.ஏ.எஸ்.ஸின் சகோதரர், ஆம்பன் புயல் பாதிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் அதிகம் இருப்பதால், எனது தங்கை சப் கலெக்டராக பதவியேற்றவுடன் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் கவனித்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசின் உதவிகளை கொண்டு சேர்ப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. பொறுபேற்றவுடன் சவாலான பணிகளை அவர் ஏற்று செய்து வருகிறார் என தமிழ் ஓவியா பற்றி பெருமிதம் தெரிவிக்கிறார அவரது அண்ணன்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications