அன்னை தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை... செயல்படுத்துவது கடினமாம்! அமைச்சர் சேகர் பாபுவே சொல்லியாச்சு!
சென்னை: அன்னை தமிழில் அர்ச்சை செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது என்றும், இத்திட்டத்தை அமல்படுத்துவது கடினம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவதற்கான அறிவிப்புப் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்டார்.
கோயில்களில் சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழில் அர்ச்சனைகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் ஆர்வலர்களால் பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வந்தது.

47 கோயில்களில் தொடக்கம்
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை தொடங்கப்பட்டது.

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு பலகை
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக கோயில்களில் வைக்கப்படும் அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த பலகைகளின் வாயிலாக அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண் பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறி இருந்தார்.

கபாலீஸ்வரர் கோயில்
இந்த திட்டம் தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சேகர்பாபு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நீர் தெளிப்பான், சூரிய ஒளிசக்தியில் இயங்கக்கூடிய 2 சோலார் விளக்கு அமைக்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அமல்படுத்துவது கடினம்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற திட்டத்தை செயல்படுவது கடினம். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். தமிழ் மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. பக்தர்கள் விரும்பினால் தமிழில் தரிசனம் செய்யலாம். இதுவரை இத்திட்டத்தை 47 கோயில்களில் அமல்படுத்தி இருக்கிறோம்" என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications