சூப்பர்.. இனி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்.. தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ உள்பட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குனர் நாகராஜ் முருகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ உள்பட பல தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் புறக்கணிக்கப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் வைத்து கொண்டு தமிழ் மொழியை பள்ளிகள் புறக்கணிப்பது வேதனையளிக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கூறினர்.

இதன் விளைவாக தமிழக பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி கடந்த 2015-16ம் ஆண்டில் இருந்து அனைத்து வகையான பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-2023ம் கல்வியாண்டில் 8 ம்வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக அமலாகி உள்ளது.
இந்நிலையில் தான் வரும் கல்வியாண்டான 2023-2024ல் 9 ம்வகுப்பு வரையும், 2024-2025ல் 10ம் வகுப்பு வரையும் தமிழ் கட்டாயமாகிறது. இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்(சிஇஓ) தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குனர் நாகராஜ முருகன் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி தமிழகத்தில் இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வுமுறை மற்றும் பாடத்திட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும்.
எனவே அனைத்து தனியார் பள்ளிகளும் இதற்கு தயாராக வேண்டும். தமிழ் கற்றுக்கொடுக்க தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ் கட்டாய பாடமுறை குறித்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications