மறைந்திருந்த மனிதம்.. கை கொடுத்து காப்பாற்றிய 20 நிமிடம்.. பிரான்சிஸ் கிருபா மீண்டது இப்படித்தான்!
எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலை.. 20 நிமிட சிசிடிவி காட்சி
Recommended Video
சென்னை: "நான் கொலை செய்யல.. கொலை செய்யல.." என்று சொல்லி கொண்டே இருந்தார் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா! அந்த பேச்சு எடுபடாமலே போய்.. உச்சக்கட்ட அவமானத்தையும், அளவுக்கு மீறின இழுக்கையும் கொஞ்ச நேரத்திலேயே சம்பாதித்து விட்டார் பிரான்சிஸ்.. தமிழ் கூறும் நல்லுலகு ஒரு எழுத்தாளனை ஒரே நாளில் காயப்படுத்திவிட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில்தான் அந்த பிரச்சனை நடந்தது. ரெண்டு பேர் போதையில் சண்டை போட்டு கொண்டதாகவும், அதில் கீழே தள்ளிவிட்டதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் இன்னொரு நபரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது. ஒன்று, சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் வாக்குமூலம். இரண்டு, சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள்!

இரும்பு கம்பி
ஆனால் முழு விசாரணை இல்லாமல் இந்த வழக்கு ஆரம்பத்தில் கையாளப்பட்டது. கைது செய்யப்பட்டவர் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா. "செத்து போனவருக்கு வலிப்பு வலி வந்துவிட்டது. ஒரு இரும்பு கம்பி கொடுத்து காப்பாற்றினேன். மூச்சு திணறல் வந்துவிட்டது. நான் கொலை செய்யல"என்ற வார்த்தைகளும் போலீசார் காதில் எடுபடவே இல்லை.

பிரான்சிஸ் கிருபா
போலீசார் கண்ணில் இருந்து எதுவுமே தப்ப முடியாது என்று சொல்வதுண்டு. ஒருவரது தோற்றத்தை வைத்து ஒரு முடிவுக்கு போலீசார் வந்தது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது. பிரான்சிஸ் கிருபா ஒருபடத்தில் நடிப்பதற்காக தாடி, பரட்டை தலைமுடியுடன் இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருந்தார், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தோற்றம், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதா? மனநல ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதா என்ற குழப்பம்.. என்றெல்லாம் போலீசார் யூகித்தனர்.

ஆதாரங்கள்
கடைசியில் மரணம் அடைந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் வலிப்பு நோயினால்தான் உயிரிழந்தார் என்றும் தெளிவாகி உள்ளது. உண்மையிலேயே, சாட்சிகள், விசாரணைகள், ஆதாரங்களைவிட பிரான்சிஸ் கிருபாவை விடுவிக்க உதவியது அவரது எழுத்துக்கள்தான்.

ஆக்ரோஷ பதிவுகள்
பிரான்சிஸ் கிருபாவின் எழுத்துக்களை நேசித்தவர்கள், அந்த மரணத்துக்கு பிரான்சிஸ் காரணமாக இருக்க மாட்டார் என்றே இணையத்தில் நம்பிக்கையுடனும் வேகத்துடனும் பதிவிட்டனர். இந்த ஆக்ரோஷ பதிவுகள்தான் எதிர்மறை செய்திகளை மாற்றி, உண்மையை வெளிக்கொணர உதவியது.

போதை சாமி
கடைசியாக இந்த வழக்கில் 20 நிமிட சிசிடிவி காட்சிகளும் பெரிதும் துணை நின்றது. அந்த வீடியோ காட்சியில், யாரை போதை ஆசாமி என்றார்களோ, யாரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றார்களோ, யாரை கொலையாளி என்றார்களோ, அவர்தான் மெல்ல மெல்ல பிரிந்து கொண்டிருந்த அந்த உயிரை காப்பாற்ற கண்ணீருடன் துடித்து போராடிக் கொண்டிருக்கிறார் என்று!
எப்படியோ "தமிழ்" பிழைத்தது!
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications