கே.வி. ஜெயஶ்ரீக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது
சென்னை: சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது தமிழகத்தின் கே.வி. ஜெயஶ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கே.வி. ஜெய்ஶ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர்.

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் எழுத்தாளர் பவா. செல்லத்துரையின் உறவினர். இவரது சகோதரி ஷைலஜா பதிப்பக உரிமையாளர் ஆவார்.
ஸ்டாலின் வாழ்த்து
சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.வி.ஜெயஶ்ரீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் . சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருதை பெற்றுள்ள கே.வி.ஜெயஶ்ரீ அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
தமிழக சங்க இலக்கியக் காட்சிகளை மையமாக வைத்து மலையாளத்தில் எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய நாவலை கேவி ஜெயஶ்ரீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார். ' நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற அந்த நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றுள்ளது. கேவி ஜெயஶ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்புப் பணி தொடரட்டும்! தமிழ்ப்படைப்புலகம் செழிக்கட்டும்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications