வடகிழக்கு பருவமழை சூப்பர் தொடக்கம்.. இன்று மாலை வரை சென்னையில் டமால் டுமீல் மழை.. வெதர்மேன்
சென்னை: சென்னையில் இன்று மாலை வரை நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று முதல் தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
நள்ளிரவு முதல் பெய்ய தொடங்கிய மழை இன்னும் பல இடங்களில் நிற்காமல் விட்டு விட்டு பெய்து வருகிறது.

வெப்பச்சலனம்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பிளாக் பக்கத்தில் கூறுகையில், தமிழகம் அருகே வளி மண்டல மேலடுக்கு சுழற்சியிலிருந்து ஈரப்பதம் கொண்ட காற்று வறண்ட காற்றுடன் இணையும் போது வெப்பச்சலனத்தால் டமால் டுமீல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஈரப்பதம்
இன்று நாள் முழுவதும் வெப்பச்சலனம் அப்படியே இருக்கும். அதனால் இன்று மாலை வரை விட்டு விட்டு மழை பெய்யும் என்பதை எதிர்பார்க்கலாம். வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் வறண்ட காற்றும் ஈரப்பதத்துடன் கூடிய காற்றும் இணைந்து சென்னையில் கனமழையை கொடுக்கும்.

பூந்தமல்லி
அது போல் ராமநாதபுரம், தூத்துக்குடியிலும் நல்ல மழை பெய்துள்ளது. மெரினாவில் அதிகபட்சமாக 178 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 139 மி.மீ.மழையும், செங்குன்றம் பகுதியில் 128 மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 127 மி.மீ மழையும் குறைந்தபட்சமாக பூந்தமல்லியில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

சூரன்குடி
அது போல் தூத்துக்குடியில் சூரன்குடியில் 106 மி.மீ மழையும், ராமேஸ்வரத்தில் 102 மி.மீ. மழையும் விருதுநகரில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளது. எனவே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தலாக இருக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications