ஏங்க.. இந்தோனேஷியாவுக்கே ஆறுதல் கூறும்போது கஜா புயலுக்கு பிரதமர் சொல்லாமல் இருந்திருப்பாரா- தமிழிசை
சென்னை: இந்தோனேஷியா சுனாமிக்கு ஆறுதல் கூறும்போது கஜா புயலுக்கு பிரதமர் சொல்லாமல் இருந்திருப்பாரா என பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த புயலுக்கு கேட்ட நிவாரணத்தையும் மத்திய அரசு கொடுக்கவில்லை.

கேரள வெள்ளத்தை பார்வையிட்ட பிரதமர், கஜா புயலை பார்வையிடவில்லை. டுவிட்டரில் ஒரு அனுதாப பதிவையும் அவர் பதிவிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையே கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து பேசினார். இதனால் மோடியை சாடிஸ்ட் என விமர்சனம் செய்தார். இதற்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தமிழிசை கூறுகையில் இந்தோனேஷியா சுனாமிக்கே ஆறுதல் கூறும் பிரதமர் கஜா பாதிப்புக்கு சொல்லாமல் இருந்திருப்பாரா.
எனவே ஸ்டாலின் ஒரு பொய்யர், சாடஸ்ட் என கடும் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications