பொங்கல் வாழ்த்து கூறிய தமிழிசை.. அக்கா தெலுங்கானா போனாலும் எங்களை மறக்கலையே.. நெட்டிசன்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளையும் தெலுங்கர்களுக்கு மகாசங்கராந்தி வாழ்த்துகளையும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் பொங்கல் தினத்தில் பொங்குக மகிழ்ச்சி என்றும் மலர்க அனைவரின் வாழ்க்கை எனவும் உளமாற வாழ்த்துகிறேன். தமிழக மக்கள் வாழ்வில் அன்பு, பாசம், செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் பொங்கி பெருக வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உள்ளங்கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துகளையும் தமிழகத்தில் வாழும் தெலுங்கு சகோதர, சகோதரிகளுக்கும் எனது உள்ளங்கனிந்த மகாசங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தேனி ஆவின் தலைவர் பதவி... ஓ.பன்னீர்செல்வம் தம்பிக்கு செக் வைத்த நீதிமன்றம்
|
இனிய போகி
இவரது வாழ்த்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அவற்றில் இருந்து உங்கள் பார்வைக்கு சில...
என்றும் தமிழக மக்களின் நலன் கருதி விரைவில் மத்திய அமைச்சராகவோ அல்லது முதல்வராக என் வேண்டுகோள் அம்மா🙏 இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்.
|
பொங்கல் வாழ்த்துகள்
அக்கா நன்றி, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்
|
வாழ்த்துகள்
தெலுங்கானா போனாலும் போனிங்க..
எங்க எங்களையெல்லாம் மறந்துடிங்களோனு நெனச்சேன்😂😂.. வாழ்த்துக்கள் மேடம்.
|
நல்வாழ்த்துகள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.