இந்தி திணிப்புக்கு தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு.. டெல்லிக்கு பறந்த கோரிக்கை!
சென்னை: திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என இந்தியில் பெயர் சூட்டியிருப்பதற்கு தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தி பெயரை உடனடியாக நீக்கி தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கர்தவ்ய த்வார் என தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு புரியாத வகையில் இப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் பெயர் பலகையை வைக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் அவர் வலியுறுத்தி உள்ளார். சில அதிகாரிகள் செய்த தவறால் மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், "மதிப்பிற்குரிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜி.எம்.எஸ். ரயில்வேக்கு நமது மொழி தமிழ் மொழிபெயர்ப்பை முறையாக வைக்கவும், தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் அறிவுறுத்துங்கள். ஏனெனில், சில அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாக, மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தேவையற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பதிவில், "புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரயில்வே. "கர்தவ்ய த்வார்" என்றால் தமிழில் "கடமையின் நுழைவுவாயில்" என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை "இந்தித் திணிப்பு" மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்." எனத் தெரிவித்து இருந்தார்.
-
திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர்.. மோடியை புகழ்ந்த எடப்பாடி பழனிசாமி! -
“கர்தவ்ய த்வார்”.. திருச்சி ரயில்வே அலுவலக நுழைவுவாயில் இந்தியில் பெயர்! பொங்கி எழுந்த சு.வெங்கடேசன் -
ராஜ்யசபா தேர்தலில் சர்ப்ரைஸ் வைத்த பாஜக.. தேசிய தலைவர் நிதின் நபினுக்கு தேடி வரும் பொறுப்பு -
கூட்டணி கடிவாளம் ஸ்டாலின் கையில்.. மாஸ் காட்டும் திமுக! அதிமுக கூட்டணியில் பாஜக டீம்! எடப்பாடி பாவம்! -
கழற்றி வீசப்பட்ட இந்தி எழுத்துக்கள்! கடும் எதிர்ப்புக்கு மத்தியில்.. நடந்த சம்பவம்! -
திருச்சி கோட்ட அலுவலகத்திற்கு இந்தி பெயர்! கடும் எதிர்ப்பால் வழிக்கு வந்த ரயில்வே -
Anusha Ravi: பாஜகவில் MLA சீட் கேட்கும் அனுஷா ரவி.. எந்த தொகுதி தெரியுமா? நயினார் சொன்ன பதில்? -
நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு.. பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜக -
ஆர்எஸ்எஸ் டவுசர் அணியமாட்டார் முருகன்! மதுக்கூர் ராமலிங்கத்தின் பேச்சால் ஆடிப்போன பாஜக.. இது எப்போ? -
பரபர சூழலில் இன்று அதிமுக மா.செக்கள் கூட்டம்.. ராஜ்யசபா வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை! -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி













Click it and Unblock the Notifications