பெயரை எப்படி எழுதுவீர்கள் என்றார்கள்.. கட்சி பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்கள்: தழுதழுக்கும் தமிழிசை
Recommended Video

சென்னை: அரசியல் சாசன பதவி.., முதல்வரே ரிப்போர்ட் செய்ய கூடிய உயர்ந்த இடம்.. குடியரசு தலைவருக்கு மட்டுமே ரிப்போர்ட் செய்ய வேண்டிய அவசியம் கொண்ட அதிகாரம்.. இத்தனையும் கொண்ட ஆளுநர் பதவியில் அமருகிறார் தமிழக மண்ணின் மகள் தமிழிசை சவுந்தரராஜன்.
ஞாயிற்றுக்கிழமை, இது தொடர்பாக அறிவிப்பு வந்தபோது, மொத்த நாட்டு மக்களை போலவே, தமிழிசைக்கும் அது சர்ப்ரைஸ் செய்திதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் எனக்கும் ஆளுநர் பதவி குறித்து தகவல் தெரிந்தது என்று நடந்த சம்பவத்தை நெகிழ்ச்சியோடு சொல்லியுள்ளார் ஒரு பேட்டியில்.

கோவில் தரிசனம்
ஒரு நாள் முன்பாக, உங்கள் பெயரை எப்படி முழுமையாக எழுதுவீர்கள், அந்த எழுத்துருவை தெரிவியுங்கள் என்று முக்கியமான இடத்தில் இருந்து எனக்கு தொலைபேசியில் அழைத்து கேட்டனர். அப்போதும் கூட எனக்கு எதற்காக என புரியவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை குடியரசு தலைவரே எனது தொலைபேசிக்கு அழைத்துள்ளார். அப்போது நான் 100 அடி சாலையில் உள்ள அம்மன் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு இருந்தேன். எனவே, எனது பாதுகாவலர், தமிழிசை சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார் என்று, போனில் பதில் அளித்துள்ளார்.

ஆன்மீக நம்பிக்கை
நான் வெள்ளிக்கிழமைதான் அந்த அம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை என்னால் கோவிலுக்கு போகமுடியவில்லை என்பதால் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்றேன். அப்போதுதான், இந்த போன் அழைப்பு வந்தது. அந்த அம்மனுக்கும் எனக்கும் ஒரு பந்தம் உள்ளது. நான் டிஜிஓ படிக்கும்போது முதல் நாள் அங்குதான் சென்று கும்பிட்டுவிட்டு வந்தேன். அப்போது அதிக மதிப்பெண்ணில் பாஸ் செய்தேன். வெளிநாட்டில் கல்வி கற்கும் வாய்ப்பும் வந்தது. நல்ல மருத்துவராகவும் பணியாற்றிறேன்.

அடிப்படை உறுப்பினர்
நான் சாமி கும்பிட்டு விட்டு வந்து திரும்ப போனில் அழைத்தேன். அப்போது குடியரசு தலைவர் பேசி தகவல் சொன்னார். எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. முதலில் போய் நீங்க பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுங்கள், அதுதான் முதல்படி என்று குடியரசு தலைவர் கூறினார். அதன்படி அலுவலகம் சென்று, 44 லட்சம் உறுப்பினர்களை சேர்ந்து கொடுத்த நானே, எனது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழச்சி
தமிழிசை சவுந்தரராஜன், 1999ம் ஆண்டு முதல் இத்தனை ஆண்டுகாலமாக பாஜகவுக்கு உழைத்ததற்கு கட்சி தலைமை இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினருமே, ஆளுநர் தமிழிசைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு காரணம், கட்சி பாகுபாடு, கொள்கை வேறுபாடுகளையெல்லாம் தாண்டி, தமிழிசையை ஒரு தமிழச்சியாக தமிழக மக்கள் பார்ப்பதுதான். சரிதானே?
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி!












Click it and Unblock the Notifications