சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விளம்பரத்திற்காக பேசுவதை இதோடு நிறுத்திக்குங்க.. இயக்குநர் ரஞ்சித்துக்கு தமிழிசை எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

Recommended Video

    முன்ஜாமீன் வழக்கில் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி

    சென்னை: ராஜ ராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது விளம்பரத்திற்காக என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சித்தது தமிழகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித்துக்கு பல்வேறு தமிழ் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ரஞ்சித் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியதால் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

    "ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்

    19ஆம் தேதி வரை தடை

    19ஆம் தேதி வரை தடை

    அந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற கிளை ரஞ்சித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் வரும் 19ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

    திரித்து கூறுவது தவறு

    திரித்து கூறுவது தவறு

    இந்நிலையில் ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்எல்லோரும் மதிக்கும் தமிழக வரலாற்றை திரித்து நாகரிகமற்ற முறையில் கூறுவது தவறு என்றார்.

    விளம்பரத்திற்காக பேசியிருக்கிறார்

    விளம்பரத்திற்காக பேசியிருக்கிறார்

    வரலாற்று ஆதாரம் இல்லாமல் பிரிவினை ஏற்படுத்துவதை போல போகிற போக்கில் பேசுவதை சிலர் நிறுத்தி கொள்ள வேண்டும். ரஞ்சித் விளம்பரத்திற்காகவும் பிரிவினையை தூண்டுவதற்காகவும் பேசியிருக்கிறார்.

    பிரிவினையை தூண்டிவிடுகிறார்கள்

    பிரிவினையை தூண்டிவிடுகிறார்கள்

    2 படம் எடுத்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்து கொள்கின்றனர். பட்டியலின மக்களுக்காக போராடுவதாக கூறி பிரிவினையை தூண்டிவிடுகிறார்கள்.

    நட்புறவோடு உள்ளது

    நட்புறவோடு உள்ளது

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, தேர்தல் நேரத்தில் அமைவது தான் கூட்டணியே தவிர தற்போதும் அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு தான் உள்ளோம். இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

    English summary
    Tamilnadu BJP leader Tamilisai warns Director Pa Ranjith for talking Raja Raja Cholan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X