10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. அறிவியலில் சென்டம் அடித்த 10 ஆயிரம் பேர்.. ஆங்கிலத்தில் அதிக தேர்ச்சி
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த வருடம் மாணவ, மாணவிகள் ஆங்கிலம் பாடத்தில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். அதேபோல அறிவியல் பாடத்தில் 10,000க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் சென்டம் எடுத்துள்ளனர். மேலும் சில முக்கிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வை 4,35,119 மாணவிகள் 4,36,120 மாணவர்கள் உள்பட 8,71,239 பேர் எழுதினார்கள். இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.88 சதவீதம், மாணவர்கள் 91.74 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

மொத்தம் 1,867 அரசுப்பள்ளிகள் உள்பட 4,917 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.52 சதவீதம் கூடுதலாகவும், இருபாலர் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.22 சதவீதம் கூடுதலாகவும் தேர்ச்சி பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்டம் 98.31 சதவீதம் தேர்ச்சியுடன் முதல் இடத்தையும், விருதுநகர் (97.45%), தூத்துக்குடி(96.76%), கன்னியாகுமரி(96.66%), திருச்சி(96.61%) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் சிவகங்கை மாவட்டம் (97.49%) முதல் இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் (95.57%), கன்னியாகுமரி(95.47%), திருச்சி(95.42%), தூத்துக்குடி(95.40%) மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களில் தேர்வு எழுதிய 12,290 பேரில் 11,409 பேர் (92.83%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறை வாசிகளில் தேர்வு எழுதிய 237 பேரில் 230 பேரும் (97.05%), தனித்தேர்வர்களில் தேர்வு எழுதிய 23,769 பேரில் 9,616 பேரும் (40.46%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக கடந்த 2024 பொதுத் தேர்வுடன் ஒப்பிடும்போது, தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 2.25 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடம் வாரியாக மாணவ, மாணவிகள் ஆங்கிலம் பாடத்தில் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் (99.46%), அதற்கு அடுத்தபடியாக சமூக அறிவியல் பாடத்தில் (99.49%), தமிழ் பாடத்தில் (98.09%), அறிவியல் பாடத்தில் (97.90%), கணிதம் பாடத்தில் (96.57%) பேர் தேர்ச்சி சதவீதம் பதிவாகியுள்ளது.
அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 10,838 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சென்டம் அடித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சமூக அறிவியல் பாடத்தில் 10,256 பேரும், கணிதம் பாடத்தில் 1,996 பேரும், ஆங்கிலம் பாடத்தில் 346 பேரும், தமிழ் பாடத்தில் 8 பேரும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சென்டம் அடித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications