மேலும் குறைந்த கொரோனா.. தமிழ்நாட்டில் இன்று 3479 பேர் பாதிப்பு.. 73 பேர் பலி.. 3855 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3479 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. தினசரி கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. பலி எண்ணிக்கையும் 100க்கும் கீழ்தான் பதிவாகி வருகின்றன.
கடந்த 3 நாட்களாக தினமும் 4 ஆயிரத்திற்கும் குறைவான புதிய கேஸ்கள் பதிவாகி வருகின்றன. அதே சமயம் புதிய கேஸ்களை விட டிஸ்சார்ஜ் அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன.

எத்தனை
தமிழ்நாட்டில் இன்று 3479 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 73 பேர் பலியாகி உள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை 33132 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 209 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 1776 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 407 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 3301 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 311 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 3885 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இன்று 3855 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2435872 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 34477 ஆக உள்ளது.

டெஸ்ட்
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2503481 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 153390 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 152105 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 32939167 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications