செம சறுக்கல்.. ஆவடியில் ஆடி போன மாஃபா பாண்டியராஜன்.. பின்னடைவு.. திமுக நாசர் முன்னிலை!
சென்னை: ஆவடி தொகுதியில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இங்கு திமுக வேட்பாளர் சா. மு நாசர் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 73 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக அமைச்சர்கள் பலர் தங்கள் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஆவடி தொகுதியில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். 2500க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இங்கு திமுக சார்பாக போட்டியிட்ட சா. மு நாசர் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் இது தபால் வாக்குகள் மற்றும் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்பதால் போக போக முடிவுகள் மாற வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications