அக்.31ல் பாஜக அறிவித்த பந்த் ஒத்திவைப்பு.. அதே நாளில் கோவை செல்லும் அண்ணாமலை.. காரணம் என்ன?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோட்டை ஈஸ்வரன் கோவில் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக குற்றச்சாட்டு
இதனிடையே கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை தமிழக அரசு என்ஐஏ மாற்றி பரிந்துரை செய்தது. இதன்பின்னர் வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கார் வெடிப்பு விவகாரத்தை பாஜக தலைவர்கள், தற்கொலைப் படை தாக்குதல் என்று கூறி வருகின்றனர்.

முழு அடைப்பு ஒத்திவைப்பு
அதுமட்டுமல்லாமல் அக்.31ல் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்பின்னர் அக்.31ல் நடைபெறுவதாக இருந்த முழு அடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கோவை மாநகர மாவட்ட பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்.31ல் கோவை மாவட்டம் பயணிக்க உள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அண்ணாமலை ட்வீட்
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ம் தேதி நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

காரணம் என்ன?
கோவையில் அக்.31ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதே நாளில் மாநில தலைவர் அண்ணாமலை பயணம் மேற்கொள்ள உள்ளார். முழு அடைப்புக்கு பதிலாக பாஜக தரப்பில் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications