காவி உடையில் பரதம், சிலம்பம் கலைஞர்கள்... பிரதமர் மோடிக்கு காவிமயமான வரவேற்பு அளித்த தமிழ்நாடு பாஜக
சென்னை: தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சிலம்பம், பரதநாட்டியம், கராத்தே, கதகலி போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பை பாஜக அளித்திருக்கிறது.
Recommended Video
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக 5:45 மணியளவில் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். சாலை மார்க்கமாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கிறது.
இதற்காக சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காவி உடை அணிந்த கலைஞர்கள் கராத்தே, பரத நாட்டியம், கதகலி, சிலம்பம் போன்ற கலைகளை செய்துகாட்டி பிரதமரை வரவேற்க காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications