நாளை சென்னை வருகிறார் மோடி! 50 ஆயிரம் தொண்டர்களை திரட்டி வரவேற்பு தரும் பாஜக! ஏற்பாடுகள் மும்முரம்!
சென்னை: நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க 50,000 தொண்டர்களை திரட்டுகிறது தமிழக பாஜக.
Recommended Video
பிரதமரை வரவேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
சென்னை நேப்பியர் பாலம் முதல் நேரு ஸ்டேடியம் வரை 25 விதமான வரவேற்பு கொடுக்க தமிழக பாஜக ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி வருகையால் இத்தனை நன்மையா? பட்டியல் போடும் பாஜக.! என்னென்ன திட்டங்கள் தெரியுமா?
சென்னை வருகை
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் புதிய திட்டங்கள் மற்றும் ரயில்வே துறையின்புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை மாலை சென்னைவருகிறார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க
திமுகவினர் 2,000 பேருக்கும், பாஜகவினர் 2,000 பேருக்கும் பாஸ்கள்வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்
அதிகாரிகள், என 400 வி.ஐ.பி. பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.
சாலை வழியாக
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு வந்தடையும் பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பயணித்து நேரு
உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜகநிர்வாகிகள் செய்து வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பாஜக தொண்டர்களை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
25 விதமான வரவேற்பு
இதேபோல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும்,
நிர்வாகிகளும் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி விழா
நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் 25 இடங்களில் 25 விதமான வரவேற்பு
கொடுக்க திட்டமிட்டுள்ளது பாஜக. அரசு விழா முடிந்ததும் தமிழக பாஜகபிரமுகர்கள் சிலருடன் மட்டும் பிரதமர் மோடி 10 நிமிடம் உரையாடுகிறார்.அதில் 4 பாஜக எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர் எனத் தெரிகிறது.
டெல்லி பயணம்
நாளை மாலை சென்னை வரும் பிரதமர் மோடி உடனடியாக ஒரு சில மணி நேரங்களில்
மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இதனிடையே சென்னை விமானநிலையத்தில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பாஜகமேல் மட்ட நிர்வாகிகள் ஆகியோர் பிரதமரை வரவேற்க உள்ளார்கள்.