தமிழக பட்ஜெட் 2019: ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு குட் நியூஸ்.. உங்களுக்கான நலத்திட்டம்!
ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு 4647.50 கோடியில் நலத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு 4647.50 கோடியில் நலத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில் தமிழக சட்டசபையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

விவசாயம் தொடங்கி பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்றது. அதன்படி,
சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு 4647.50 கோடியில் நலத்திட்டம் செயல்படுத்தப்படும்.
38,000 குடியிருப்புகளை அமைக்க திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை தவிர்த்த பிற நகரங்களில் 5000 கோடி மதிப்பீட்டில் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு உறைவிட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வறுமை ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தீனதயாள் உபாத்யாயா, திட்டத்தின்கீழும், தமிழக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக 1031.53 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது, என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications