Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பட்ஜெட் 2019: அழிந்து வரும் மாடுகளை பாதுகாக்க அசத்தல் முடிவு.. தமிழக அரசு புதிய திட்டம்!

தமிழகத்தில் முதல்முறையாக கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்காக தமிழகத்தில் முதல்முறையாக கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மிக முக்கியமான கட்டத்தில் தமிழக சட்டசபையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Tamilnadu Budget 2019: TN govt will create Sperm center for traditional Cow cultivation says OPS

பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றது. அதன்படி, தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம், தமிழ் அறிஞர்களின் படைப்புகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடியில் உணவு பதப்படுத்தும் பூங்காவை தமிழகத்தில் அமைக்க உள்ளது.

ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். மரபுத்திறன் மிக்க நாட்டின, கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படும்.

இது அழிந்துவரும் மாட்டினங்களை மீண்டும் அதிகமாக்க வழி செய்யும். வீரியம் மிக்க காளை மாடுகளை உற்பத்தி செய்ய அதிரடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

மாடுகளின் உற்பத்தியை பெருக்கவும், ஜல்லிக்கட்டு மாடுகளை அதிகம் உற்பத்தி செய்யவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே இந்த கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+