'பொன்னாடைகள் வேண்டாம், புத்தகங்கள் ஓகே..' இதுதான் முதல்வரின் பாலிசி.. அன்பளிப்பு புத்தகங்கள் நன்கொடை
சென்னை: தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளைத் தவிர்த்து புத்தகங்களையே அன்பளிப்பாக அளிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், பரிசாக வந்த சுமார் ஆயிரம் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் கன்னிமாரா நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
பொதுவாக அரசியல்வாதிகளைச் சந்திக்க வரும் பிரபலங்கள் பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையுமே எடுத்து வருவார்கள்.
இவை பெரும்பாலும் யாருக்குமே பயன்படாது. ஒரு முறை ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே பொன்னாடைகளும் பூங்கொத்துகளும் பயன்படும்.

கடையில் கூட வாங்க மாட்டார்கள்
அதன் பிறகு யாரும் அதனை கண்டுக்கொள்ளக் கூட மாட்டார்கள். திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கூட ஒரு கூட்டத்தில், பொன்னாடைகளைத் தான் மதிக்க மாட்டேன் என்றும் அது யாருக்கும் பயன் தருவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் கடையில் மீண்டும் விற்க அனுப்பினால் கூட, அதைக் கடைக்காரர்களும் வாங்க மறுப்பதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருந்தார்.

புத்தகங்கள்
தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையும் தவிர்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த 2017ஆம் ஆண்டு முதலே அவர் இந்த பாலிசியை தான் கடைப்பிடித்து வருகிறார். அப்போது முதலே அவரைச் சந்திக்க வருபவர்கள் பெரும்பாலும் புத்தகங்களையே பரிசாக அளிக்கிறார்கள். அப்படி இதுவரை அன்பளிப்பாகக் கிடைத்த 80,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் நூலகங்களுக்கும் பரிசாக வழங்கியுள்ளார்

முதல்வரான பிறகும் தொடர்கிறது
ஸ்டாலின் முதலமைச்சரான பிறகும்கூட இதே தான் தொடர்கிறது. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வரும் நபர்கள் பலரும் புத்தங்களை அன்பளிப்பாக அளித்தனர். கொரோனா நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கிய பலரும் புத்தகங்களையும் சேர்ந்தே அளித்தனர். குறிப்பாக, கொரோனா நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 50 லட்ச ரூபாய் காசோலை மட்டுமின்றி சில புத்தகங்களையும் வழங்கினார்.
Recommended Video

நன்கொடை வழங்கினார்
கடந்த சில காலமாக முதல்வர் ஸ்டாலின் அன்பளிப்பாகப் பெற்ற சுமார் 1000 புத்தகங்களை எழும்பூரில் அமைந்துள்ள கன்னிமாரா பொது நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். பொது நூலக இயக்கக இணை இயக்குநர் கே.செல்வக்குமார் மற்றும் கன்னிமாரா பொது நூலக துணை நூலகர் எம்.கணேஷ் ஆகியோரிடம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

புத்தக வாசிப்பு
புத்தகம் வாசிப்பு பழக்கம் என்பது பரவலாகக் குறைந்து வருகிறது. இதைக் கல்வியாளர்கள் ஆபத்தான ஒரு போக்காக பார்க்கின்றனர். இப்படியொரு சமயத்தில் முதலமைச்சர் எடுத்துள்ள இதுபோன்ற முன்னெடுப்புகள் குறைந்தது திமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால்கூட அது மாற்றத்திற்கு நல்லதொரு தொடக்கமாகவே அமையும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications