பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் தான் இந்த குஷ்பு... ஆயிரம் விளக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கலகல
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்பொழுது குஷ்பு சிறந்த பேச்சாளர் என்றும், திறமைசாலி எனவும் முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார்.
பாஜக வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குஷ்புவுக்கு புகழாரம்
இந்நிலையில், குஷ்புவிற்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது குஷ்புவைச் சிறந்த பேச்சாளர் என்றும், திறமைசாலி எனவும் புகழாரம் சூட்டினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் திறமை குஷ்புவிடம் இருப்பதாகவும், அவர் போட்டியிடும் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

ஆசி பெற்ற வேட்பாளர்
பிரதமர் ஏழை, எளிய மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், அத்தகைய பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் தான் குஷ்பு என்றும் முதல்வர் குறிப்பிட்டார். அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித்தரப்படும் என்றும், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர், ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை குஷ்பு நிறைவேற்றித் தருவார் எனக் கூறினார்.

எதிரி கட்சியா?
ஆயிரம் விளக்கு தொகுதி தங்களது கோட்டை எனக்கூறும் திமுக, இதுவரை தொகுதிக்காக என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு நூலகம் கட்டப்பட்டதா? திமுக தனது குடும்ப வளர்ச்சியை மட்டுமே பார்க்கும் என்றார். அண்மையில் முதலமைச்சரின் தாயார் காலமான நிலையில் அவரை குறித்து திமுகவினர் மிகவும், இழிவாகவும், கேவலமாகவும் பேசியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார்.

பெண்கள் பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம்
ஆயிரம் விளக்கு தொகுதி தங்களது கோட்டை எனக்கூறும் திமுக, இதுவரை தொகுதிக்காக என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு நூலகம் கட்டதா திமுக தனது குடும்ப வளர்ச்சியை மட்டுமே பார்க்கும் என்றார். அண்மையில் முதலமைச்சரின் தாயார் காலமான நிலையில் அவரை குறித்து திமுகவினர் மிகவும், இழிவாகவும், கேவலமாகவும் பேசியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications