பரிசாக பெற்ற 1000 புத்தகங்களை.. கன்னிமாரா நூலகத்திற்கு.. நன்கொடை அளித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பரிசாகப் பெற்ற 1000 புத்தகங்களைக் கன்னிமாரா நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே, தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையும் தவிர்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவர் ஸ்டாலின்.
அப்போது முதலே அவரைச் சந்திக்க வரும் பலரும் பூங்கொத்துகளைத் தவித்து புத்தகங்களையே பரிசாக அளிக்கிறார்கள்.
அப்படிக் கிடைக்கும் புத்தங்கள் இதற்கு முன், பல முறை தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நூலகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது அவரை நேரில் சந்தித்து பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர். அத்துடன் புத்தகங்களையும் முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக அளித்தனர்.
அப்படி பரிசாகப் பெற்ற சுமார் 1000 புத்தகங்களைக் கன்னிமாரா பொது நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நன்கொடையாக வழங்கினார்.
தமிழ்நாடு பொது நூலக இயக்க இணை இயக்குநர் கே.செல்வக்குமார் மற்றும் கன்னிமாரா பொது நூலக துணை நூலகர் எம்.கணேஷ் ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பரிசாகப் பெற்ற 1000 புத்தகங்களைக் கன்னிமாரா நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே, தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையும் தவிர்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவர் ஸ்டாலின்.
அப்போது முதலே அவரைச் சந்திக்க வரும் பலரும் பூங்கொத்துகளைத் தவித்து புத்தகங்களையே பரிசாக அளிக்கிறார்கள்.
அப்படிக் கிடைக்கும் புத்தங்கள் இதற்கு முன், பல முறை தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நூலகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது அவரை நேரில் சந்தித்து பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர். அத்துடன் புத்தகங்களையும் முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக அளித்தனர்.
அப்படி பரிசாகப் பெற்ற சுமார் 1000 புத்தகங்களைக் கன்னிமாரா பொது நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நன்கொடையாக வழங்கினார்.
Recommended Video
தமிழ்நாடு பொது நூலக இயக்க இணை இயக்குநர் கே.செல்வக்குமார் மற்றும் கன்னிமாரா பொது நூலக துணை நூலகர் எம்.கணேஷ் ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.