தமிழ்நாட்டில் மளமளவென குறையும் கொரோனா பாதிப்பு.. பண்டிகை காலத்திலும் தொடருமா?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று மாநிலத்தில் 1009 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
இந்நிலையில், மாநிலத்தில் இன்று மொத்தம் 1,009 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.23 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1009 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,02,623 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.8%ஆக உள்ளது. அதிகபட்சமாக்கத் திருப்பூரில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.7%. ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.6%ஆகக் குறைந்துள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் என மொத்தம் 19 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 4 பேரும் செங்கல்பட்டு. ஈரோடு, நீலகிரி, திருவாரூர் மாவட்டங்களில் தல 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,116 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
புதிய கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைகிறது. நேற்று மாநிலத்தில் 11,685ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 11,492ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,183 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,55,015
பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 119 பேருக்கும் செங்கல்பட்டில் 83 பேருக்கும் ஈரோட்டில் 75 பேருக்கும் திருப்பூரில் 68 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவைத் தவிரத் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை.












Click it and Unblock the Notifications