கொரோனா 2ஆவது அலைக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. எதற்கெல்லாம் அனுமதி?
சென்னை: கொரோனா 2ஆவது அலைக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதையடுத்து மே மாதம் முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா கேஸ்கள் குறைந்தவுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது.
பின்னர் படிப்படியாக தளர்வுகளுடன் ஏற்பட்டு தமிழகத்தில் மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் நீங்கின. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் பரவிய ஓமிக்ரான் தற்போது இந்தியா உளளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.

ஓமிக்ரான்
இந்த புதிய வேரியண்ட்டால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா, கோவா, டெல்லி, கர்நாடகா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் வார இறுதி நாட்களில் ஊரடங்கும் அமலாகியுள்ளன.

இரவு நேர ஊரடங்கு
அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலாகின. அதன்படி இரவு நேரத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வேறு யாருக்கும் அனுமதி இல்லை.

31 மணி நேர ஊரடங்கு
அது போல் இன்று தமிழகத்தில் கிட்டதட்ட 6 மாதங்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாகியுள்ளன. அதன்படி இன்றைய தினம் எவற்றுக்கெல்லாம் அனுமதி வழங்கப்படுகிறது என்பதை பார்ப்போம். நேற்று இரவு10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை 31 மணி நேர ஊரடங்கு அமலாகியுள்ளது.

முழு ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி
- உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
- உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி
- இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை
- இன்றும் வார நாட்களிலும் இரவு 10 முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி
- உணவகங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யலாம்
- சொந்த விநியோக முறையில் உணவகங்கள் டெலிவரி செய்ய அனுமதி
- இன்று முழு ஊரடங்கின் போது திருமண நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி
- திருமண அழைப்பிதழை காண்பித்து பயணஙகளை மேற்கொள்ள அனுமதி
-
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம் -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட் -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார்











Click it and Unblock the Notifications