கபசுர குடிநீர் குடிக்கலாம்.. கொரோனா குணமாகாது.. நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.. தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கபசுர குடிநீர் அருந்துங்கள். அப்போதுதான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் தமிழகத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை தடுக்க மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கொரோனாவிலிருந்து தப்ப நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Tamilnadu government advises to take Kabasura water

இந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். இதையே தமிழக அரசும் கூறியுள்ளது.

இந்த கபசுர குடிநீர் விநியோகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு ஆரோக்கியம் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள், போலீஸாருக்கு முதல்வர் பழனிச்சாமி கபசுரக் குடிநீரை வழங்கினார்.

கொரோனாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம். இவை இரண்டும் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு சக்திக்காக மட்டுமே என தமிழக அரசு விளக்கியுள்ளது.

Recommended Video

    கபசுர குடிநீர் குடிங்க...நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்-சித்த மருத்துவர்கள்

    சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரண பொட்டலங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+